ஆம்புலன்ஸ் என்பது உலகம் முழுதும் ஒரு அத்தியாவசிய வாகனமாக இருக்கிறது. உலகில் எல்லா நாடுகளிலும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. அவை எல்லாம் அவசர உதவிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் சாலையில் செல்லும் போது ஆம்புலன்ஸிற்கு சிறப்பு அனுமதிகள் இருக்கிறது. இதனால் மற்றவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும். இது ஒருவரின் உயிரை காப்பாற்ற என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வேண்டுமென்றே சொந்த தேவைக்காக பயன்படுத்த கூடாது. ஆனால் சமீபத்தில் தைவான் நாட்டில் முதியவர் ஒருவர் சூப்பர் மார்கெட்டிற்கு செல்வதற்காக ஆம்புலன்ஸை பயன்படுத்தி வந்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை சமீபத்தில் போலீசில் ஒருவர் குறித்து புகா் அளித்தது. அதன்படி ஒருவர் ஒரே ஆண்டில் 39 முறை ஆம்புலன்ஸ் புக் செய்திருக்கிறார். அவரை வீட்டிற்கு சென்று ஆம்புலன்ஸ் கூட்டி வந்து மருத்துவமனையில் விட்டுள்ளது. ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமலேயே வெளியே சென்றுள்ளார். இது ஒரிருமுறை நடந்தால் பராவாயில்லை 39 முறையும் இப்படியே நடந்துள்ளது. பின்னர் அவர் வந்த தேதிகளை வைத்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இவர் அத்தனை முறையும் அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார்.
அதாவது அவர் வீட்டிலிருந்து சூப்பர் மார்கெட் வர இந்த ஆம்புலன்ஸ் சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இனிமேல் இது போல செய்தால் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
அவர் ஒவ்வொரு முறையும் தனக்கு உடல் நிலை சரியில்லை. தன்னுடன் யாருமில்லை என கூறி ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனை சென்று அங்கு சிகிச்சை பெறாமல் எஸ்கேப் ஆகி சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாக பரவிவருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
அதாவது அவர் வீட்டிலிருந்து சூப்பர் மார்கெட் வர இந்த ஆம்புலன்ஸ் சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இனிமேல் இது போல செய்தால் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
அவர் ஒவ்வொரு முறையும் தனக்கு உடல் நிலை சரியில்லை. தன்னுடன் யாருமில்லை என கூறி ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனை சென்று அங்கு சிகிச்சை பெறாமல் எஸ்கேப் ஆகி சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாக பரவிவருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்