ஆப்நகரம்

Tamil Nadu: படுத்த படுக்கையான மனைவிக்கு, கணவன் செய்த பெரிய உதவி...! விருது வழங்கி அரசு கவுரவிப்பு...!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சரவணமுத்து இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Samayam Tamil 25 Mar 2019, 4:32 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சரவணமுத்து இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
Samayam Tamil மனைவிக்கு, கணவன் செய்த பெரிய உதவி


இதனால் மனைவி கழிப்பறையை பயன்படுத்துவதில் கடும் சிரமத்தை அனுபவித்தார். இதனால் தனது மனைவி படுக்கையில் இருந்தபடியே கடன்களை கழிப்பதற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என கணவர் சரவண முத்து யோசித்தார்.
Read More: வயதிற்கு வந்த பெண் மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருக்க பெற்றோரே கட்டித்தரும் "காதல் குடிசை"

இதையடுத்து அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடைசியாக படுக்கைக்கு கீழேயே ஒரு கழிப்பறை செட் செய்து, அதை படுக்கையில் இருப்பவர்கள் மற்றவர்களின் உதவி இல்லாமலேயே பயன்படுத்தும் விதமாக வடிவமைத்தார்.

Read More: குளர் பானத்தில் வயகரா கலந்ததால் 6 மணி நேர "விரைப்பால்" தவித்த ஆண்..!

இந்த படுக்கை கழிப்பறையில் பிளஷ் டேங்க், படுக்கையில் நடுவே ஒப்பன், செப்படிக் டேங்கிற்காக இணைப்பு எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதை படுக்கையில் இருப்பவர்களே ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயன்படுத்தும் விதமாகவும் சரவணமுத்து வடிவமைத்துள்ளார்.

மொத்தம் மூன்று பட்டன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் முதல் பட்டன் படுக்கையில் உள்ள கழிப்பறையை மூடியை திறக்கவும், இரண்டாவது பட்டன் கழிப்பறையை திறக்கவும், மூன்றாவது பட்டன் பிளஷ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.


Read More: "தாலியுடன் நிர்வாணம்" என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி அதுவும் நம்ம ஊரில்..!

இந்த கண்டிபிடிப்பு பெரிய அளவில் பலரால் பாராட்டப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக தேசிய கண்டுபிடிப்பு குழுமத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை கடந்த 5ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சரவண முத்துவிற்கு வழங்கினார். இந்த விருதுடன் பரிசு தொகையாக ரூ 2 லட்சம் மட்டும் இந்த கட்டிலை தயாரித்ததற்கு ஆன செலவு தொகையாக ரூ 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிலை கடந்த 2015ம் ஆண்டே சரவணமுத்து தயாரித்திருந்தாலும் அதற்கான அங்கீகாரம் தற்போது தான் அவருக்கு கிடைத்தது. இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை இவருக்கு இதே போல ஒரு கட்டிலை தயாரித்து தர சொல்லி 350க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்துவிட்டன.

அடுத்த செய்தி