ஆப்நகரம்

இங்கிலாந்தில் "தமிழ் வாழ்க" "தந்தை பெரியார் வாழ்க" கோஷம்..! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ

நஜிமுதீன் ஜாபர் சாதிக் என்பவர் இந்தியா இங்கிலாந்து போட்டி நடந்தமைதானத்தில் "தமிழ் வாழ்க" "தந்தை பெரியார் வாழ்க" என்ற வாசகத்துடன் இருந்த போர்டை ஏந்தி நின்றார்.

Samayam Tamil 2 Jul 2019, 11:47 am
இந்தியா இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி கடந்த ஜூன் 30ம் தேதி நடந்தது. வழக்கமாக இந்தியா விளையாடும் போட்டி என்றால் கூட்டம் நிரம்பி வழியும்.
Samayam Tamil இங்கிலாந்தில்  தமிழ் வாழ்க தந்தை பெரியார் வாழ்க கோஷம்


அந்த வகையில் இந்த போட்டியிலும் அதிகமாக கூட்ட வந்திருந்தது. இந்த போட்டியின் போது புதுக்கோட்டையை சேர்ந்த நஜிமுதீன் ஜாபர் சாதிக் என்பவரும் சென்றுள்ளார். அவர் மைதானத்தில் "தமிழ் வாழ்க" "தந்தை பெரியார் வாழ்க" என்ற வாசகம் அடங்கிய பாதகையை ஏந்தி நின்றார்.


அவர் தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகிவிட்டது. நிஜிமுதீன் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவிட்டார்.

அடுத்த செய்தி