ஆப்நகரம்

தமிழில் தேசிய கீதம் பாடும் அரசு பள்ளி ஆசிரியை - வைரலாகும் வீடியோ

அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தமிழில் தேசிய கீதம் பாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 10 Oct 2019, 1:59 pm
இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கன மன" பாடலை ரவீத்திரநாத் தாகூர் எழுதினார். இந்த பாடலை பாடப் பல விதிமுறைகள் இருக்கின்றன. 52 விநாடிகளில் பாடப்படும் இந்த பாடல் அரசு நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகளில் கட்டாயம் பார்க்க முடியும்.
Samayam Tamil தமிழில் தேசிய கீதம் பாடும் அரசு பள்ளி ஆசிரியை


இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியையாவ இவாஞ்சலின் என்பவர் தேசிய கீதத்தைத் தமிழில் பள்ளி மாணவிகளுடன் பாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : விவாகரத்தான கணவனுடனேயே மீண்டும் ஓடிப்போன மனைவி...! என்ன காரணம் தெரியுமா?

இந்த வீடியோவில் அவர்கள் பாடும் பாடல் வரியில் "இனங்களும், மொழிகளும் பல இருந்தும் மனங்களில் பாரதத் தாயே!... வடக்கே விரிந்த தேசாபிமான தெற்கில் குமரியில் ஒலிக்கும்... இன மத வேற்றுமை உடைகளிலிருந்தும் இதயத்தில் ஒற்றுமை பொங்கும்" என் பாடல் வரிகள் இருக்கிறது. இதனைப் பலர் பாராட்டினாலும், இது சரியான மொழி பெயர்ப்பு அல்லது. தேசிய கீதத்தை இப்படி மொழி பெயர்த்துப் பாடுவது சட்ட விரோதமானது எனப் பலர் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


Also Read : சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்

தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த தமிழ்த் தேசிய கீதம் குறித்த விவாதம் தீவிரமாகப் பரவி வருகிறது.



Also Read : ஆட்டோவில் அமர்ந்து "மப்பு" ஏத்தும் பெண்... வைரல் வீடியோவில் இருப்பது யார் தெரியுமா?


அடுத்த செய்தி