ஆப்நகரம்

தமிழர்கள் உரிமைக்காக குரல் எழுப்பும் டுவிட்கள் - டிரெண்டாகும் #தமிழகவேலைதமிழருக்கே!

தமிழகத்தில் ஒதுக்கப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் குரல் எழும்பத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 3 May 2019, 2:21 pm
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணி வாய்ப்புகளில் பெரும்பாலும் வடமாநில இளைஞர்களையே காண முடிகிறது. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Samayam Tamil Twitter Trending


ஏற்கனவே ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதில் பலரும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே போதிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது டுவிட்டரில் தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ”தமிழ்நாடு” அமைக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் வணிகம் - வேலைவாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த தாயகத்திலேயே அடிமைகளாக இருக்கும் சூழல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.




அடுத்த செய்தி