ஆப்நகரம்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட் செய்து மாட்டிக்கொண்ட இளைஞர்...

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட்டிங் செய்வரை அந்த இரண்டு பெண்களும் சேர்ந்து பழி வாங்கிய சுவரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 21 Jun 2021, 5:18 pm

ஹைலைட்ஸ்:

* ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட்டிங் செய்த இளைஞர்*அந்த இரண்டு பெண்களுக்கும் விஷயம் தெரிந்ததால் அவர்கள் இருவரும் அவரைஏமாற்ற முடிவு
* இறுதியாக அவரை ஏர்போர்டில் வைத்து இருவரும் சந்தித்து தலைதெறிக்க ஓட வைத்தனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட் செய்து மாட்டிக்கொண்ட இளைஞர்...
நீங்கள் ஒரு பெண்ணை டேட் செய்கிறீர்கள் என்றால் முதல் விதி அந்த பெண்ணிடம் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும், உண்மையை சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அந்த டேட்டிங் நீண்ட காலத்திற்கு நீடித்து அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் 2-3 பேரை டேட் செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்படியாக ஒருவர் டேட்டிங் செய்து இருவர் முன்னிலையிலும் மாட்டிக்கொண்ட சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த கிரிஸ்டியன் பிஷப் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷோபி மில்லர் என்பவரிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.அதில் ஷோபி தான் ஆடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை டேட் செய்து வருவதாகவும், ஆனால் அவர் கிரிஷ்டியனுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தார். முதலில் கிரிஸ்டியன் இதை நம்பவில்லை. பின்னர் ஷோபி தான் ஆடம் வீட்டிலிருக்கும் போது கிரிஸ்டியனிற்கு வீடியோகால் செய்து தான் சொன்னதை நிரூபனம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் ஆடமை கையும் களவுமாக மாட்ட வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் கிரிஸ்டியனும் ஆடமும் 8 நாட்கள் இஸ்தான் புல்லிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி ஆடமும் கிரிஸ்டியனாவும் இஸ்தான்புல் செல்ல விமான நிலையம் சென்ற போது அங்கு ஷோபியும் வந்திருந்தார். இவர்கள் இருவரும் விமான நிலைய பாத்ரூமிற்குள் சந்தித்தனர். பின்னர் ஒன்றாக வெளியே வந்து ஆடமை சந்தித்த போது அவர் மாட்டிக்கொண்டார். பின்னர் இருவரிடமும் என்ன சொல்லி தப்பிப்பது என தெரியாமல் முழித்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு முறை பெண்களையும் கட்டிய "மச்சக்கார" மாப்பிள்ளை...
இதையடுத்து இருவரும் ஆடமை விட்டு விட்டு கிரிஸ்டியனாவும், ஷோபியும் ஒன்றாக இஸ்தான்புல் சென்று விடுமுறையை கொண்டாடினர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் பல்வேறு கேகள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி