ஆப்நகரம்

உலகின் மிக உயரமான இடத்தில் நடந்த வாக்குப்பதிவு ; 4 டிகிரி குளிரில் வந்து வாக்களித்த மக்கள்

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் கடந்த 11ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

Samayam Tamil 15 Apr 2019, 8:28 pm
இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகள் நேற்று முதல் துவங்கியது. பல மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
Samayam Tamil உலகின் மிக உயரமான இடத்தில் நடந்த வாக்குப்பதிவு


சிக்கீம் மாநிலத்திலும் நேற்று சில தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 4 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க மொத்தம் 567 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதில் முக்கியமான வாக்குச்சாவடி என்ன என கேட்டால் அது கேத்னேக் வேலி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி தான் இந்த பகுதி இந்தோ - சீனா எல்லை பகுதி அருகே அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியாகும்.

அந்த பகுதியில் வாக்குப்பதிவு நடந்த போது வெப்பம் சுமார் 4 டிகிரி செல்சியஸ் தான் இருந்தது. கேத்னேக் பகுதியில் குறைவான வாக்காளர்களே இருந்தாலும் அவர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் பல சிரமங்களுக்கு இடையே தான் இந்த வாக்குசாவடி அமைக்கப்பட்டது.

அதே நேரத்தில் மக்களும் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மக்கள் நீண்ட வரிசையில் நின்று கூட வாக்களித்ததை பார்க்க முடிந்தது என அந்த பகுதி தேர்தல் அலுவலர் கபில் மீனா தெரிவித்தார்.

இந்த வாக்குப்பதிவு நடந்த பகுதியை உள்ளடக்கிய தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் சீக்கீம் முதல்வர் பவன்குமாரும் ஒருவர். அவர் அதே தொகுதியில் தொடர்ந்து 8 முறை எம்எல்ஏ வாக இருந்து வருகிறார்.


அதே சிக்கீம் மாநிலத்தில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. தெற்கு சிக்கீம் பகுதியை சுமித்ரா ராய் என் மூதாட்டி நேற்று நடந்த வாக்குப்பதிவில் வாக்களித்துள்ளார். அவருக்கு வயது 107, அவர் வீல் சேரில் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

அடுத்த செய்தி