ஆப்நகரம்

உலக நாடுகளுக்கு மட்டும் தான் உபதேசம்..! எங்களுக்கு அது கிடையாது..!

கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்திற்கு வந்தவர்களால் சுமார் 7.25 லட்சம் கிலோ கார்பன் மாசு ஏற்பட்டுள்ளது. மாசுவை கட்டுப்படுத்த இவர்கள் பல முயற்சிகள் குறித்து பேசிவிட்டு இவர்களே அதிகமான மாசு ஏற்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 3:34 pm
உலக பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒரு குழு ஆய்வு செய்து உலக நாடுகள் பருவ நிலை மாற்றத்திற்கு என்ன விஷயங்களை எல்லாம் கடை படிக்க வேண்டும், என்பது குறித்து விவாதித்து வருகிறது. உலகம் வெப்பமயமாகுதல், மனிதர்கள் பயன்படுத்து பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த குழு அதிகம் விவாதித்து வருகிறது.
Samayam Tamil உலக நாடுகளுக்கு மட்டும் தான் உபதேசம்..! எங்களுக்கு அது கிடையாது..!


பெரும்பாலும் இந்த கூட்டம் எல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் குறித்த முரணான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது மற்றவர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு டாவோஸில் பருவ நிலை மாற்றம் குறித்த பல்வேறு கூட்டங்கள் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதியில் இருந்து தலைவர்கள், ஆலோசகர்கள் என பலர் டாவோஸிற்கு பயணித்துள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் பிரைவேட் ஜெட் விமானங்களில்தான் பயணித்துள்ளனர்.

கடந்தாண்டு நடந்த பருவநிலை மாற்றம் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டும் சுமார் 1500 விமானங்கள் டாவோஸிற்கு வந்துள்ளது. இந்த கூட்டங்களில் விமானங்களில் இருந்து வெளியாகும் கார்பனால் ஏற்படும் பருவ நிலை மாற்றம் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது.,
இது குறித்து அவர்களே வெளியிட்ட கணக்கீட்டின் படி தனியாக நபர் பயணிக்கும் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து சுவிட்டர்லாந்து வந்து சென்றால் சுமார் 7 மெட்ரிக் டன் கார்பனை வெளியற்றுகிறது என கூறுகிறது.

அந்த கணக்கின் படி கணக்கிட்டு டாவோஸிற்கு வந்த சென்ற விமானங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தது. இந்த விமானங்களால் கடந்தாண்டு மட்டும் குறைந்தது 1500 மெட்ரிக் டன் கார்பன் வெளியேறியுள்ளது. அதாவது சுமார் 7.5லட்சம் கிலோ நிலக்கரியை எரித்தால் எவ்வளவு கார்பன் வெளியேறுமோ அதே அளவிலான கார்பன் வெளியேறியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சைய கிளம்ப்பியுள்ளது. பருவ நிலை மாற்றம் குறித்து பேசுபவர்களே பருவநிலைக்கு கேடுவிளைவிக்கும் செயலை செய்திருப்பது இன்று சமூகவலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி