ஏடிஎம் திருட்டு என்பது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. சில இடங்களில் வெற்றிகரமாக திருடி அதில் உள்ள பணத்தை வெளியே எடுத்துவிடுகின்றனர். பலர் முயற்சி செய்து பணத்தை எடுக்க முடியாமல் சென்று விடுகின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு நூதனமான ஏடிஎம் திருட்டு முயற்சி சம்பவம் நடந்துள்ளது. நாமக்கள் மாவட்டம் அனியாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து யாரோ உடைப்பது போல சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தில் ஏடிஎம் மிஷனிற்குள் ஒருவர் மாட்டிக்கொண்டு ஏடிஎம் மிஷினை உடைத்துக்கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு போன் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்த போது அவர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டிருந்தது. தெரியவந்தது. அவரிடம் போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்ட போது தான் ஏடிஎம் இயந்திரத்தில் திருட வந்ததாகவும் எதிர்பாராத விதமாக ஏடிஎம் மிஷனிற்குள் மாட்டிக்கொண்டதாகவும் வெளியே வர முடியாமல் திண்டாடி வருவதாகவும் கூறினார்.
உடனடியாக போலீசார் சிலரின் உதவியுடன் அவரை மீட்டு ஏடிஎம் மில் கொள்ளையடிக்க முயன்றதற்காக அவரை கைது செய்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலம் சாம்பரன் மாவட்டத்தைச் சேகர்ந்த உபேந்திர ராய் என்பதும், அவர் கூலி வேலை பார்த்து வந்ததும், இரவு நேரத்தில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
அவர் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் திணறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிண்டலாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
உடனடியாக போலீசார் சிலரின் உதவியுடன் அவரை மீட்டு ஏடிஎம் மில் கொள்ளையடிக்க முயன்றதற்காக அவரை கைது செய்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலம் சாம்பரன் மாவட்டத்தைச் சேகர்ந்த உபேந்திர ராய் என்பதும், அவர் கூலி வேலை பார்த்து வந்ததும், இரவு நேரத்தில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
அவர் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் திணறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிண்டலாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.