ஆப்நகரம்

நடுரோட்டில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்....! அட இது நல்லா இருக்கே

திருப்பூரில் இளைஞர் ஒருவர் குழாய் உடைப்பின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 6 Feb 2020, 1:22 pm
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிகிறது.
Samayam Tamil நடுரோட்டில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்



இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞர் நூதனமான முறையில் அந்த குழிக்குள் இறங்கி சோப்பு போட்டுக் குளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Also Read : நீருக்கடியில் தேனிலவு கொண்டாடிய தம்பதி.... மனைவி மர்ம மரணம்... இறுதியாக வெளியான புகைப்படத்தில் சிக்கியது முக்கிய ஆதாரம்...!


இதைக் கவனித்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகப் பதிவிட்டார். சந்திரசேகர் நடு ரோட்டில் சோப்பு போட்டுக் குளிக்கும் விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி