ஆப்நகரம்

வங்கி ஏடிஎம் மிஷிற்குள் விரலைவிட்டு நோண்டியே ரூ1.54 லட்சம் திருடிய பலே வாலிபர்..!

குஜராத்தில் வங்கி ஏடிஎம்மில் இருந்து நூதனமாக பணம் திருடிய வங்கி கொள்ளையனை போலிசார் கைது செய்தனர்.

Samayam Tamil 1 Mar 2019, 5:58 pm
வங்கி ஏடிஎம் மிஷின்களின் திருட்டு நடப்பது குறித்து நாம் அறிந்திருப்போம். சிலர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டு பல பாதுகாப்பு அம்சங்களால் மாட்டிக்கொள்கின்றனர். ஆனால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
Samayam Tamil வங்கி ஏடிஎம் மிஷிற்குள் விரலைவிட்டு நோண்டியே ரூ1.54 லட்சம் திருடிய பலே வாலிபர்..!


அந்த வகையிலான ஒரு திருட்டு தான் சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்தது. அங்குள்ள ஒரு யூனியன் வங்கி கிளையின் கீழ் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கணக்கும் ஏடிஎம்மில் பணம் மீதம் இருக்கும் கணக்கும் அவ்வப்போது டேலி ஆகாமல் இருந்துள்ளது.

மிஷின் தான் பணத்தை செலுத்துகிறது என்கிறது போது கணக்கு நிச்சயம் டேலி ஆக வேண்டும் ஆனால் ஆகவில்லை என்றால் எப்படி என அந்த வங்கி மேனேஜர் அனுப் சிங்கிற்கு சந்தேகம் வந்தது.
Read More: பா.ஜ., வை திட்டும் அபிநந்தனின் போலி மனைவி..! வேகமாக பரவும் வீடியோ..!

உடனடியாக அவர் ஏடிஎம் கேமரா பதிவுகளை சோதனை நடத்தினார். அதில் ஹர்ஸ் படேல் ஒரு நபர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் மீது மேனேஜர் போலிசில் புகார் அளித்தார்.

ஆவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஏடிஎம்மில் இருந்து பணத்தை திருடியதை ஒப்பு கொண்டார். இதுவரை அவர் சுமார் 1.54 லட்சம் ஏடிஎம்மில் இருந்து எடுத்துள்ளது தெரியவந்தது.

அவர் எவ்வாறு கொள்ளையடித்தார் என்பதை போலிசார்விசாரிக்கும் போது அவர் சொன்ன தகவல் மிகவும் சுவரஸ்யமாக இருந்தது. ஏடிஎம்மில் பணம் வருவதற்கு முன்னரே வரும் இடம் வழியாக விரலை நுழைத்து விடுவாராம் பணம் எண்ணும் போது அந்த விரலை பயன்படுத்தி பணத்தை எடுப்பாராம். அவ்வாறு அவர் எக்ஸ்டராவாக எடுத்தபணம் அவர் கணக்கில் கழிக்கப்படாது.
Read More: "அபிநந்தன் இனி இந்தியாவின் மகன்"வார்த்தமானை வாழ்த்திய பொதுமக்கள்...!

அதிகம் எடுத்தால் மாட்டிக்கொள்வோம் என ஒவ்வொரு முறையும் சிறிய சிறிய அளவிலான பணத்தை திருடியுள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி