ஆப்நகரம்

World Cup 2019 Final: ஐபிஎல் போல வீரர்களை கடன் வாங்கி விளையாடும் இங்கிலாந்து அணி!- பாதிபேர் வெளிநாட்டு வீரர்களா?

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு எவ்வளவு பரிசு வழங்கப்படுகிறது தெரியுமா? இவ்வளவு கோடி பரிசு தொகைக்காக தான் இந்த ஆட்டம்.

Samayam Tamil 14 Jul 2019, 3:19 pm
உலககோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை நடக்கிறது. அரையிறுதி போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்திய அணி உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய வருத்தமான செய்தி நாம் எல்லோருக்கும் தெரியும். நாளை நடக்கவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் மோதுகின்றன.
Samayam Tamil தோல்வியடைந்த இந்தியாவிற்கே இவ்வளவு கோடி பரிசா


இந்த செய்தியில் நாம் இந்த உலககோப்பையில் பங்கேற்ற அணிகள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என பார்க்கலாம்.

NZ vs ENG: உலகக் கோப்பை இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படுமா?- வானிலை அறிக்கை இதோ!

உலககோப்பையைில் வெற்றி பெரும் அணிக்கு தங்கத்தால் ஆன உலககோப்பை மற்றும் அணிக்கு மொத்தமாக 4 மில்லியன் டாலரும் பரிசாக வழங்கப்படும் அதன் இந்திய மதிப்பில் சுமார் ரூ27.42 கோடி. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். அதன் இந்திய மதிப்பு ரூ13.71 கோடி

World Cup 2019 Final: ஐபிஎல் போல வீரர்களை கடன் வாங்கி விளையாடும் இங்கிலாந்து அணி!- பாதிபேர் வெளிநாட்டு வீரர்களா?

அரையிறுதி போட்டிக்கு வந்து வெளியேறிய அணிக்கு 8 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ5.48 கோடி பரிசாக வழங்கப்படும். இது போக லீக் போட்டிகளில் ஒவ்வொரு வெற்றி பெரும் அணிக்கும் 40 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.74 கோடி வழங்கப்படும்.

World Cup 2019 Final: யார் பலம்?- இங்கிலாந்து வெற்றிக்கு ஆப்பு வைக்குமா நியூசிலாந்து?

இது போக லீக் போட்டியில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு அணிக்கும் தலா 1 லட்சம் டாலர் போனஸாக வழங்கப்படும். அதன் இந்திய மதிப்பு ரூ6.85 கோடி

இந்திய அணியை பொருத்தவரை இந்த உலககோப்பை தொடரில் மொத்தம் 7 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக மொத்தம் 2.8 லட்சம் டாலர் இந்திய மதிப்பில் ரூ1.91 கோடி கிடைத்துள்ளது.

இது போக அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் போனஸ் 1 லட்சம் டாலர் மற்றும் அரையிறுதிலேயே வெளியேறியதால் வெறும் 8 லட்சம் டாலர் என மொத்தம் 9 லட்சம் டாலர் பரிசாக பெற்றது அதன் மதிப்பு ரூ 6.1 கோடியாகும். லீக் போட்டியில் பெற்ற ரூ 1.91 கோடி மற்றும் அரையிறுதியில் பெற்ற தொகையை சேர்த்து ரூ 8.01 கோடியை மொத்தம் பரிசாக பெற்றுள்ளது இந்திய அணி.

இந்த பரிசு தொகை ஐசிசி வழங்கும் பரிசு தொகையாகும் இது போக மேன் ஆஃப் தி மேட்ச்க்கு வழங்கப்படும் பரிசு தொகை தனி. இது போக வீரர்களுக்கு சம்பளம் ஐசிசி தனியாக வழங்கும் அது தனி கணக்கு.

அடுத்த செய்தி