ஆப்நகரம்

பெண்கள் விடுதிக்குள் சென்று பிராக்களை திருடிய விநோத கொள்ளையன்..! எதற்கு தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி என்ற பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் பையல் பயஸ் அகமது சித்தே. இவருக்கு அதிகமாக குடிபழக்கம் இருந்துள்ளது. எந்த நேரத்திலும் மது போதையிலேயே இருந்துள்ளார்.

Samayam Tamil 11 May 2019, 5:45 pm
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி என்ற பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் பையல் பயஸ் அகமது சித்தே. இவருக்கு அதிகமாக குடிபழக்கம் இருந்துள்ளது. எந்த நேரத்திலும் மது போதையிலேயே இருந்துள்ளார்.
Samayam Tamil பெண்கள் விடுதிக்குள் சென்று பிராக்களை திருடிய கொள்ளையன்


இதனால் இவரை அந்த தனியார் நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கிவிட்டது. இதன் பின் அவரை வேறு யாரும் பணியில் சேர்க்காததால் மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக லேப்டாப்களை திருடி கள்ள சந்தையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் குடித்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள கோரக்கன் என்ற பகுதியில் ஒரு மகளிர் விடுதி இருந்துள்ளது. அங்கு சென்று லேப்டாப்களை திருடினார்.

அங்கு வந்த பெண்கள் லேப்டாபை காணவில்லை என விடுதி நிர்வாகத்திடம் கூறி சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தனர். அதில் பைசல் விடுதிக்குள் வந்து லேப்டாப்பை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் திருடிவிட்டு செல்லும் போது விடுதியில் இருந்த பெண்களின் உள்ளாடைகளையும் திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் பைசலை கைது செய்தனர். பெண்களின் உள்ளாடைகளை அவர் ஏன் திருடினார் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி