ஆப்நகரம்

AUDI A3 கார் வாங்க இந்த பொண்ணு என்ன வேலை செஞ்சுது தெரியுமா?

ஜெர்மனியை சேர்ந்த 20 வயது பெண் வீட்டில் உள்ள பிரிண்டரில் இருந்து 15 ஆயிரம் யூரோக்களை கள்ளநோட்டாக பிரிண்ட் செய்து அதை வைத்து ஆடி காரை வாங்கி முயற்சி செய்துள்ளார்.

Samayam Tamil 27 Jul 2019, 6:53 pm
ஜெர்மனியை சேர்ந்த 20 வயது பெண்ணிற்கு எப்படியாவது ஆடிக்கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் அவரிடம் அதற்கு போதுமான பணம் இல்லை.
Samayam Tamil AUDI A3 கார் வாங்க இந்த பொண்ணு என்ன வேலை செஞ்சுது தெரியுமா


எப்படியாவது காரை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அவரை குறுக்கு வழியில் யோசிக்க வைத்துள்ளது. அவர் வீட்டில் இருந்த பிரிண்டர் மூலம் 15 ஆயிரம் யூரோக்களை கலர் பிரிண்ட செய்துள்ளார். அங்கு சென்று கார் வாங்குவதற்காக கைசர்ஸ்லாதெர்ன் கார் டீலரிடம் சென்றுள்ளார்.

அங்கு அவர் 2013ம் ஆண்டு வெளிவந்த ஆடி ஏ3 காரை தேர்வு செய்துள்ளார். அதற்காக கட்டவேண்டிய பணத்தை கட்ட சென்றார். அங்கு அவர் பிரிண்டரில் பிரிண்ட் செய்த கள்ளநோட்டுகளை செலுத்தியுள்ளார்.
Read More: 1 கிலோ குப்பைக்கு இலவச உணவு - வைரலாகும் புதிய ரெஸ்டாரென்ட்

அதை பார்த்த கார் டீலர் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக பார்த்தாலே இது போலி நோட்டு என்று தெரியும் அளவிற்கு இருந்தது அந்த கள்ள நோட்டு என தெரியும் அளவிற்கு அந்த நோட்டு இருந்தது.

முதலில் இது எதாவது பிராங்க் நிகழ்ச்சியாக இருக்கும் என எண்ணிய கார் டீலர்கள் அந்த பெண்ணிடம் கள்ளநோட்டு என்பதை சொல்லாமல் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு அவர் அளித்த பதிலால் இவர் ஏமாற்றதான் வந்திருக்கிறார் என்பதை உறுதி செய்து போலீசாருகு்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து அந்த பெண்ணை கைது செய்து அவர் கொண்டு வந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அந்நாட்டு சட்டப்படி அந்த பெண்ணிற்கு 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: ஓரின சேர்க்கை LGBT இது தான் காரணமாம்...! பாதிரியாரின் பகீர் விளக்கம்...!

பெண் ஒருவர் கள்ளநோட்டு அடித்து அதை வைத்து ஆடி கார் வாங்கி சென்ற விவகாரம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி