ஆப்நகரம்

ஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்... வட இந்தியாவில் விநோதம்...

வட இந்தியாவில் ஒரே கணவனை பெற்ற மூன்று பெண்கள் அந்த கணவனின் நலன் வேண்டி விரதமிருந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2019, 3:43 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கார்வா சாத் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் பெண்கள் நாள் முழுவதும் விரதமிருந்து பெண்கள் சல்லடையின் வழியாக இரவில் நிலவைப் பார்ப்பார்கள். இது பழங்காலங்களில் பொருள் தேடிச் செல்லும் கணவனுக்காக மனைவி செய்யும் விரதமாகும் இன்றும் வட இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
Samayam Tamil karuvasath


இந்த பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தது. இந்த தினத்தில் ஒரு விநோனமான சம்பவம் நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் லோத்வாரா பகுதியில் உள்ள காசி ராம் காலணியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் ஷோபா, ரீனா, மற்றும் பிங்கி என்ற மூன்று சகோதரிகளைக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்கள் எல்லாம் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

Also Read: தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க புதிய யுக்தியை கையாண்ட கல்லூரி - வைரலாகும் புகைப்படம்

இந்த சகோதரிகளில் மூன்றுபேரும் ஒன்றாகச் சேர்ந்து கார்வா சாத் விரதமிருந்து தங்களின் ஒரே கணவனுக்காக மூன்று பேரும் ஜல்லடை வழியாக நிலவைப் பார்த்தனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி