நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் தரணி. இவர் சுவீடன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவருக்கும் அதே நாட்டை சேர்ந்த மரினா சூசேன் என்பவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வேறு வேறு நாடு, வேறு வேறு மதம், மொழி, இனம், கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் மனம் ரீதியாக ஒத்துப் போவதால் இருவரும் தங்கள் காதலைத் திருமணத்திற்குக் கொண்டு செல்ல விரும்பினர்.
Also Read : வாய்க்குள் விரலைவிட்டு கண் வழியாக எடுக்கும் அதிசய மனிதன்... இது மாயமில்லை மந்திரமில்லை...!
இதையடுத்து இருவரும் இது குறித்து அவர்கள் வீட்டில் சொல்ல இரு வீட்டார் தரப்பிலிருந்தும் சம்மதம் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் செய்ய விரும்பினர். ஆனால் எந்த முறையில் திருமணம் செய்வது என்பது இருவருக்கும் குழப்பமாக இருந்த நிலையில் மணமகன் வீட்டாரின்படி இந்து முறைப்படியும், மணமகள் வீட்டாரின் படி கிறிஸ்தவ முறையிலும், பின்னர் மணமக்கள் இருவரின் விருப்பப்படி சுயமரியாதை இணையேற்ப என மூன்று விதமாகத் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read : வாய்க்குள் விரலைவிட்டு கண் வழியாக எடுக்கும் அதிசய மனிதன்... இது மாயமில்லை மந்திரமில்லை...!
இதையடுத்து இருவரும் இது குறித்து அவர்கள் வீட்டில் சொல்ல இரு வீட்டார் தரப்பிலிருந்தும் சம்மதம் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் செய்ய விரும்பினர். ஆனால் எந்த முறையில் திருமணம் செய்வது என்பது இருவருக்கும் குழப்பமாக இருந்த நிலையில் மணமகன் வீட்டாரின்படி இந்து முறைப்படியும், மணமகள் வீட்டாரின் படி கிறிஸ்தவ முறையிலும், பின்னர் மணமக்கள் இருவரின் விருப்பப்படி சுயமரியாதை இணையேற்ப என மூன்று விதமாகத் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.