ஆப்நகரம்

நாட்டியமாடி வைரலான டூரிஸ்ட் கைடு - அசர வைக்கும் வீடியோ

தமிழகத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு ஒருவர் நாட்டியமாடி வெளிநாட்டினருக்கு பரதநாட்டிய கலையை விளக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 3 Oct 2019, 12:50 pm
இந்தியாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலைகள், கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாக தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு மக்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Samayam Tamil நாட்டியமாடி வைரலான டூரிஸ்ட் கைடு


இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு ஒருவர் வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் கலைகள் குறித்து பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அவர் ஜீன்ஸ் திரைப்படத்தின் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் வரும் இசைக்கு பரதநாட்டியம் ஆடுவதில் இருந்து பாவனைகள் செய்யுவது வரை அவர் வெளிநாட்டினருக்கு செய்து காட்டிய விதம் காண்பவர்களை அசர வைத்துவிட்டது.

அவர் செய்து காட்டும் போது சுற்றி இருந்தவர்கள் என்ன இந்த வீடியோவை பார்ப்பவர்களும் மெய்மறந்து அவர் செய்வதையே பார்க்கும் விதமாக அவர் கலைகளை விளக்கினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை வெளியிட்ட பிரியங்கா ஷூக்லா என்பவர் இந்த வீடியோவில் டூரிஸ்ட் கைடாக இருப்பவர் பெயர் பிரபு என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது எந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை.

அடுத்த செய்தி