ஆப்நகரம்

Polyana Viana: தன்னிடம் திருட முயன்றவரின் முகத்தை பஞ்சர் செய்த குத்து சண்டை வீராங்கணை

குத்துச்சண்டை வீராங்கணையிடம் திருட முயன்றவரின் முகத்தை பஞ்சர் செய்துள்ளார் அந்த வீராங்கனை அவர் ஏற்கனேவ 10 முறை உலக அளவிலான போட்டிகளில் தங்கபதக்கம் வெற்றுள்ளார். தற்போது அந்த திருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jan 2019, 5:57 pm
26 வயதான குத்துச்சண்டை விராங்கனை பாலியானா வியானா. இவர் யூஎஃப்சி எனப்படும் குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் இவர். தற்போது இவர் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரியோவில் வசித்து வருகிறார்.
Samayam Tamil boxing


இவர் வெளியில் செல்ல கேப் புக் செய்து விட்டு கேப்பிற்காக காத்திருக்கிறார். அப்பொழுது அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் ஒரு நபர் அருகில் வந்து அமர்ந்து அவரிடம் மணி என்ன என கேட்டுள்ளார்.

அதற்கு பாலியானா நேரத்தை சொன்ன பின்பு அந்த நபர் பாலியானாவிடம் அவரது செல்போனை தந்துவிடும் படியும். இப்பொழுது தான் திருட வந்திருப்பதாகவும். இதை அதை வெளியில் காட்டிக்கொண்டால் அவர் வைத்திருக்கும் துப்பாக்கி மூலம் சுட்டு விடுவதாகவும் மிரட்டினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் பாலியானா, தன் அருகில் உட்காந்திருப்பவர் ஒரு திருடன், அவன் தன்னிடம் தான் திருட வந்துள்ளான் என்பதை உணர்ந்த பின்பு தன்னை காத்துக்கொள்ள அந்த திருடனை தாக்க முடிவு செய்தார்.

ஏற்கனவ இவர் உலக அளவிலான குத்து சண்டை போட்டிகளில் தங்கம் வென்றதால் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அவரிடம் காட்ட எண்ணி தான் இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து அந்த நபரை ஒரு குத்தாக குத்தினார்.

இதில் அந்த திருடன் பலத்த காயமடைந்தார். இதில் அவரது முகத்தின் வடிவமே மொத்தமாக மாறிவிட்டது வாய் மூக்கு எல்லாம் ரத்தம் வர துவங்கியது. இந்தசம்பவத்திற்கு பின் அந்த இடத்திற்கு வந்த போலீசார் திருடனை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஒரு குத்துச்சண்டை விராங்கனை என்பது தெரியாமல் அந்த திருடன் தன் கை வரிசையை காட்ட முயன்று, இனறு முகம் எல்லாம் வீங்கிபோயுள்ளார். இந்த சம்பவம் செய்தியாக வைரலாகி வருகிறது. பலர் இது குறித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி