ஆப்நகரம்

11 அடி மலைப்பாம்புகளை கண்டு மக்கள் அதிர்ச்சி, வைரல் போட்டோஸ்!

ஒடிஷாவில், நின்று கொண்டிருந்த JCB இயந்திரத்தில் 2 பெரிய மலைப்பாம்புகள் கண்டெடுப்பு. இன்டர்நெட்டில் வைரலாகும் புகைப்படங்கள்.

Samayam Tamil 20 Jan 2021, 3:01 pm
கடந்த ஞாயிறன்று ஒடிசாவில் ஒரு ஜே.சி.பி இயந்திரத்தில் இருந்து இரண்டு பெரிய மலை பாம்புகள் மீட்கப்பட்டன. பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லிகுமுலா என்னும் கிராமத்தில் ஒரு நீர் தேக்கப்பகுதி உள்ளது. இந்த பகுதியை அழகுப்படுத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பணிகளுக்காகத்தான் அங்கு ஜே.சி.பிக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறுதலாக அதில் பாம்புகள் குடியேறிவிட்டன.
Samayam Tamil 11 அடி மலைப்பாம்புகளை கண்டு மக்கள் அதிர்ச்சி, வைரல் போட்டோஸ்!


அதில் ஒரு மலைப்பாம்பு 7 அடி நீளமும் மற்றொன்று 11 அடி நீளமும் கொண்டது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு பாம்புகளில் ஒன்று ஜே.சி.பியின் மேலே அமர்ந்திருந்ததால் எளிதாகவும் விரைவாகவும் மீட்கப்பட்டது. ஆனால் மற்றொரு பாம்பு இயந்திரத்தின் உள்ளே காணப்பட்டது. இதனால் அதை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அதற்கு அதிக நேரம் எடுத்தது.

எ.என்.ஐ டிவிட்டரில் இதுக்குறித்து பகிர்ந்துள்ள செய்தியில் வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் இணைந்து அந்த மலை பாம்பை பிடிக்க முயற்சி செய்துக்கொண்டுள்ளதை காணலாம்.

புகைப்படங்கள்:


நான்கு மணி நேரம் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில் இறுதியில் அந்த பாம்புகள் பிடிக்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டன.

“பாம்பு மீட்கும் குழுவினருக்கு இரவு 9 மணியளவில் அழைப்பு வந்தது. இதனால் இரவு 9.30 மணியளவில் பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். அப்போது ஒரு பாம்பு ஜே.சி.பிக்கு மேலே இருந்ததால் எளிதாக மீட்கப்பட்டது. ஆனால் 11 அடி நீளமுள்ள மற்றொரு பாம்பு இயந்திரத்தின் உள்ளே இருந்தது. அதை மீட்கவே நான்கு மணி நேரம் ஆனது” என்று பாம்பு மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட திரு சுவாதின் குமார் சாஹு கூறினார்.

எப்படியிருந்தாலும் பாம்பு நல்ல முறையில் மீட்கப்பட்டது.

அடுத்த செய்தி