ஆப்நகரம்

"என் கணவர் என்னை ரொம்ப காதலிக்கிறார்" என கூறி விவாகரத்து கேட்ட மனைவி...!

அரபு நாட்டில் ஒரு பெண் தன் கணவர் தன்னை அதிகமாக காதலிக்கிறார் என கூறி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 26 Aug 2019, 4:52 pm

நவீனக் காலத்தில் விவாகரத்து அதிகமாக நடந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள முடியாமை ஒருவரது விருப்பம் அல்லது தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியாமை, கணவன் மனைவி இடையே இருக்கும் காதல் என ஒவ்வொருவருக்கும் விவாகரத்திற்காக ஒவ்வொரு காரணம் இருக்கும்.
Samayam Tamil என் கணவர் என்னை ரொம்ப காதலிக்கிறார் என கூறி விவாகரத்து கேட்ட மனைவி


ஆனால் அரபு நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் பலரை வியப்பிற்குள்ளாகியுள்ளது.

விவாகரத்திற்காக அவர் கூறிய காரணங்கள் : "கணவர் தன்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. நான் உதவி கேட்பதற்கு முன்பே வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார். எனக்குப் பிடித்ததை எல்லாம் சமைத்து வைக்கிறார். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்.
என் மீது கோபமே அவருக்கு வருவதில்லை.

ஜப்பானிய பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கும்பகோணம் இளைஞர்...!

எங்களுக்குள் எந்த விதமான பிரச்னையும், சண்டையும் வந்ததேயில்லை. இது எனக்குப் பிடிக்கவில்லை. எங்களுக்குள் கோபம் மற்றும் சண்டையில்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை. எனக்கு அவருடன் வாழ்வது நரகம் போல் உள்ளது.

முக்கியமாக அவர் என்னிடம் ரொமாண்டிக்காக நடந்துகொள்வது. அவ்வப்போது ஆச்சரியமூட்டும் வகையில் பரிசுகளைக் கொடுப்பதும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வாழ்க்கை என்றால் சின்ன சின்ன விவாதங்களாவது நடக்கவேண்டும் எங்களுக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அவர் உடல் எடை அதிகமாக இருக்கிறார் என நான் அவரை உடற்பயிற்சி செய்யச் சொன்னேன். அதன்படி அவரும் அதைச் செய்தார். ஆனால் உடற் பயிற்சியின் போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதே மிச்சம். " என தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காண்டம் விற்பனை செய்ய இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள்?

இவர் புஜைரா நகரில் உள்ள ஷரியா கோர்ட்டில் தனது விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி