ஆப்நகரம்

திருமணமாகி 24 மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்

உ.பியில் திருமணமாகி 24 மணி நேரத்திற்கு முன்பே மனைவி கணவன் விரதட்சனை தரவில்லை என கூறி விவாகரத்து செய்துள்ளார்.

Samayam Tamil 18 Jul 2019, 6:20 pm
உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் சஹாஹே அலாம் இவருக்கும் ருக்சானா பனோ என்ற பெண்ணிற்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடந்தது.
Samayam Tamil திருமணமாகி 24 மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்


இந்நிலையில் திருமணமான பின்பு மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை பொருட்களை கொண்டு இறக்கியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து ஏற்கனவே தனக்கு டூவீலர் வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. ஆனால் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சனையாக வந்த பொருட்களில் இருசக்கர வாகனம் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அலாம் திருமணமான 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ருக்சனாவின் வீட்டார் அலாம் மீது போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 24 மணி நேரத்திலேயே கணவன் மனைவியை விவாகரத்து செய்த விவகாரம் பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி