ஆப்நகரம்

உ.பியில் குழி தோண்டியவருக்கு கிடைத்த புதையல்...! ரூ25 லட்சம் தங்க நகைகள் சிக்கியும் ஒரு புண்ணியம் இல்லை

உ.பியில் வீட்டிற்கு அஸ்திவாரம் கட்ட குழி தோண்டியவருக்கு புதையல் கிடைத்த சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 3:32 pm

உ.பி மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொண்டிருந்தார். அவர் அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு பழைய பானை நிறைய நகைகளுடன் ஒரு புதையல் கிடைத்துள்ளது.
Samayam Tamil குழி தோண்டியவருக்கு கிடைத்த புதையல்


அவர் அந்த புதையலை யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டில் பதுக்கவிட்டார். இந்தியாவில் புதையல் கிடைத்தால் அதில் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அந்த பகுதியிலிருந்து எடுத்தவருக்குச் சொந்தம், மற்றவை எல்லாம் அரசு சொத்தாகும்.

இவ்வளவு அற்புதமான போட்டோஷாப் ஒர்க் பார்த்திருக்கவே மாட்டீங்க...!

இவருக்குப் புதையல் கிடைத்ததும் அதை அவர் பதுக்கியதும் ஊரில் உள்ள சிலருக்குத் தெரியவந்தது. இந்த செய்தி ஊர் முழுவதும் தீயாகப் பரவியது. இதையடுத்து போலீஸ் அவர் வீட்டில் சென்று சோதனை நடத்தியபோது அவர் வீட்டில் சுமார் ரூ25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் அடங்கிய புதையல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதைப் பறிமுதல் செய்தனர்.

130 கீ.மீ., வேகத்தில் செல்லும் போது காற்றில் பறந்த செல்போனை சாதூர்யமாக பிடித்த நபர் - வைரலாகும் வீடியோ

இந்தியப் புதையல் சட்டப்படி புதையலை எடுத்தவர் அது குறித்து முதலில் தெரிவிக்கவில்லை என்றால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம். மேலும் புதையலில் அவருக்கு எந்த பங்கும் இல்லை முழுவதும் அரசிற்குச் சொந்தம், மேலும் தகவல் தெரிவிக்காததற்காக இவருக்கு அபராதம் அல்லது சிறை, சில சமயங்களில் இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி