உத்திரபிரதேச மாநிலம் ஏத்தா மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவர் வேலைக்கு சென்றிருந்த போது உடல் நலக்குறைவாக உள்ள தனது பாட்டியை காண தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவரது கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் அவரது மனைவி இல்லாது கண்டு அவரது மனைவிக்கு உடனடியாக போன் செய்துள்ளார். அதில் அவர் தனது மனைவியை 30 நிமிடத்தில் வீட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
உடனடியாக பதறியடித்துக்கொண்டு மனைவி தனது தாயார் வீட்டில் இருந்து கிளம்பினார். ஆனால் அவரது சரியாக 30 நிமிடங்களுக்குள் கணவர் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் சரியாக 30 நிமிடத்தில் மீண்டும் மனைவியை தொடர்பு கொண்ட கணவர், செல்போனிலேயே "தலாக் தலாக் தலாக்" என சொல்லியுள்ளார்.
இதை கேட்டதும் மனைவி உடைந்து போய்விட்டார். இது குறித்து மனைவி கணவர் மீது புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரில் தன் தாயார் குடும்பம் மிகவும் கஷ்டமாக சூழ்நிலையில் இருந்ததால் கணவருக்கு எந்த விதமான வரதட்சனையும் வழங்க முடியவில்லை. இதை காரணம் காட்டி அவர் என்னை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்தார். எனது தாயார் குடும்பம் என்றாலே அவருக்கு ஆகாது என்ற நிலை வந்து விட்டது. இப்பொழுது அவர் எனக்கு முத்தலாக் சொல்லியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.
முத்தலாக் குறித்து தற்போது மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதற்கான அரசாணை இதுவரை வெளியாகவில்லை. இன்று பட்ஜெட் கூட்ட தொடருக்காக லோக் சபா கூடுகிறது. இதில் முத்தலாக் குறித்த அரசாணையை வெளியிடுவது இந்த கூட்ட தொடரில் செய்யவேண்டிய விஷயங்களில் தலைமையான விஷயமாக இருக்கிறது.
உடனடியாக பதறியடித்துக்கொண்டு மனைவி தனது தாயார் வீட்டில் இருந்து கிளம்பினார். ஆனால் அவரது சரியாக 30 நிமிடங்களுக்குள் கணவர் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் சரியாக 30 நிமிடத்தில் மீண்டும் மனைவியை தொடர்பு கொண்ட கணவர், செல்போனிலேயே "தலாக் தலாக் தலாக்" என சொல்லியுள்ளார்.
இதை கேட்டதும் மனைவி உடைந்து போய்விட்டார். இது குறித்து மனைவி கணவர் மீது புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரில் தன் தாயார் குடும்பம் மிகவும் கஷ்டமாக சூழ்நிலையில் இருந்ததால் கணவருக்கு எந்த விதமான வரதட்சனையும் வழங்க முடியவில்லை. இதை காரணம் காட்டி அவர் என்னை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்தார். எனது தாயார் குடும்பம் என்றாலே அவருக்கு ஆகாது என்ற நிலை வந்து விட்டது. இப்பொழுது அவர் எனக்கு முத்தலாக் சொல்லியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.
முத்தலாக் குறித்து தற்போது மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதற்கான அரசாணை இதுவரை வெளியாகவில்லை. இன்று பட்ஜெட் கூட்ட தொடருக்காக லோக் சபா கூடுகிறது. இதில் முத்தலாக் குறித்த அரசாணையை வெளியிடுவது இந்த கூட்ட தொடரில் செய்யவேண்டிய விஷயங்களில் தலைமையான விஷயமாக இருக்கிறது.