ஆப்நகரம்

காசி சிவனிற்கு முகமூடி.... கொரானா வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை?

காசியில் உள்ள காசி விஸ்வநாதர் சிவனுக்கு கொரோனா வருவதை தடுக்க முகமூடி அணிந்து வழிபாடு நடத்தப்பட்டது.

Samayam Tamil 11 Mar 2020, 11:50 am
சீனாவின் ஊகான் மாகாணத்திலிருந்து துவங்கி இன்று உலகையே கொரோனா அச்சுறுத்தி வருகிறது. மக்கள் எல்லாம் கொரோனா தாக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரசும் அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
Samayam Tamil kasi sivan


இந்நிலையில் வாரணாசியில் உள்ள விசுவநாதர் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கு அங்குள்ள பூசாரி மாஸ்க் போட்டு சிவனுக்கு கொரோனா வரக்கூடாதெனச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இது குறித்து அவர் கூறும்போது : "இது ஒரு சாதாரண விஷயம் தான் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் என்பத்றகாவே இதைச் செய்கிறோம். சிலைகளுக்கு ஆடைகள் உடுத்துகிறோம். ஏதேனும் விஷயம் அதிகமாகப் பரவினால் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இவ்வாறு செய்வோம் அது போல் தான் இதுவும்" என விளக்கமளித்தார்.


Also Read :
இந்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் 13 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றால் நம்ப முடிகிறதா?

கொரோனாவிற்காக மக்கள் எல்லாம் முகமுடி போட்டுச் சுற்றும் இந்த நேரத்தில் காசியில் சிவனுக்கும் முகமூடி போட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி