ஆப்நகரம்

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நாய், மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ!

மெக்ஸிகோவில் வெள்ளத்தில் சிக்கிய நாய் ஒன்றினை, மீட்பர்கள் படகில் மீட்டு வரும் வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 16 Nov 2020, 3:12 pm
மொழி, நாடு என பிரிவினைகளை தாண்டி, இன்று இணையத்தில் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்த வீடியோ இது. நாய் ஒன்று வெள்ளத்தின் காரணத்தால் ஒரு மூலையில், கம்பியினைப் பிடித்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது, வெள்ளத்தில் படகு மூலம் மக்களை காப்பாற்ற சென்று மீட்பர்கள், அந்த நாயை கண்டு, மீட்டு எடுத்து வந்தனர். இந்த வீடியோ, நெட்டில் வைரலாகப் பரவி வருகிறது.
Samayam Tamil video of dog saved by rescuers from floodwaters in mexico goes viral on twitter
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நாய், மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ!


நடந்தது என்ன?

மெக்ஸிகோவின் பல இடங்களில் வெள்ளம் காரணமாக வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஒரு பகுதியில் வீட்டின் வெளியே நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருக்கும் மக்களை மீட்க சென்று குழுவினர், இந்த நாயை கண்டனர். உடனே, நாயை மீட்டு தங்கள் படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து சென்றனர்.

மீட்பர்கள் நாயினை மீட்கும் வீடியோ:

இந்த வீடியோவினை அமெரிக்க கூடைப்பந்து வீர்ர் ரெக்ஸ் சப்மன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தென்கிழக்கு மெக்ஸிகோ பகுதியில் பெரியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. படகில் வந்த மீட்பர்கள், குளிரில் நடுங்கி, பயந்து கொண்டிருந்த நாயை பாதுகாப்பாக மீட்டு சென்றனர். இவர்கள் நிஜமான ஹீரோக்கள், என்ற கருத்தவுடன் பதிவிட்டிருந்தார்.

முதலில் இந்த வீடியோவினை எவன் ஹெர்னாண்டஸ் என்பவர் பகிர்ந்திருந்தார் என கூறப்படுகிறது. அந்த நாயை மெக்ஸிகோவை சேர்ந்த கடற்படையினர் மீட்பு பணியின் போது மீட்டதாக கூறப்படுகிறது. இன்டர்நெட் முழுக்க இந்த வீடியோ, தற்சமயம் வைரலாக பரவிவருகிறது.

சிலர் உணர்ச்சிப்பூர்வமான தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறன்றனர்...

அடுத்த செய்தி