ஆப்நகரம்

காவியால் கடவுளான கழிப்பறை...! எங்கு இந்த கூத்து தெரியுமா?

உபி மாநிலத்தில் கழிப்பறையை கோவிலாக நினைத்து மக்கள் வழிபட்ட விநோத சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 7:19 pm
உ.பி மாநிலத்தில் காட்டப்பட்டிருந்த கழிப்பறை ஒன்று பல நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக அதற்கு வண்ணம் பூசும் பணி நடந்தது. இந்த பணியில் கழிப்பறையின் சுற்றுச் சுவரில் காவி நிறம் பூசப்பட்டது.
Samayam Tamil காவியால் கடவுளான கழிப்பறை
IMAGE CREDITS : TWITTER


காவி நிறத்திலிருந்ததால் இது புதிதாகக் கட்டப்பட்ட கோவிலாக இருக்கலாம் எனக் கருதிய சிலர் இந்த கழிப்பறையைக் கோவில் என நினைத்து வழிபடத் துவங்கினர். அவர்களைப் பார்த்த மற்றவர்களும் அதையே பின் தொடர்ந்தனர்.

Also Read : "தம்பி கிள்ளிட்டான்" அடங்கப்பா...! இது உலக நடிப்புடா சாமி... - வைரலாகும் சிறுவனின் வீடியோ
சிலர் கழிப்பறை வாசலிலேயே பூஜையெல்லாம் செய்யத் துவங்கினர். பலர் இதைக் கோவில் இல்லை எனச்சொல்லியும் பூஜை செய்யும் மக்களையும், சாமி கும்பிடும் மக்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

Also Read : திரைப்பட ரீலீஸ் தேதியில் நடக்கவிருந்த திருமணத்தை தள்ளி வைத்த மாப்பிள்ளை...!

இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் இந்த கட்டிடத்திற்கு பிங்க் நிற பெயிண்டை தற்போது அடித்துள்ளனர். தற்போதுதான் இது கோவில் அல்ல என மக்கள் அறிந்து வழிபாடு செய்வதை நிறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி