ஆப்நகரம்

Aayutha pooja : அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய துர்கா பூஜை - வைரலாகும் புகைப்படம்

கொல்கத்தாவை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் துர்கா பூஜையை விளக்கும் வகையில் போஸ் கொடுத்து வெளியான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 7 Oct 2019, 1:25 pm
தற்போது இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் துர்கா தேவி சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். சமூகவலைத்தளம் முழுவதும் நவராத்திரி, கொலு, ஆயுதபூஜை குறித்த பதிவுகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Samayam Tamil துர்கா பூஜை


Also Read : பிளாஸ்டிக்டிற்கு பதிலாக வாழை இலை பயன்படுத்தும் மீன் கடைகாரர் - வைரலாகும் வீடியோ

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒருஅரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர் இணைந்து துர்கா பூஜையை விளக்கும் வகையில் போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைப்படம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : வேலைக்கு செல்ல மறந்து காலை 11 மணி வரை தூங்கியவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனை...!

இந்த ட்வீட்டை தனது பக்கத்தில் வெளியிட்ட மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மக்களுக்கு துர்காபூஜா வாழ்த்துக்களைப் பதிவிட்டிருந்தார். இதில் பலர் வந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Also Read : Tik Tok ல் 40 லட்சம் பின் தொடர்பாளர்களை பெற்ற OMG பொண்ணு...!

இந்த புகைப்படத்தின் அந்த பள்ளியின் சுவற்றில் "மற்றவர்களுக்கு நல்லவனாக/கொடையாளனாக இரு" எனப் பொருள்படும் வகையில் இந்தியில் ஒரு வாசகம் இருந்தது. இது சரியாக இந்த பண்டிகையைக் குறிக்கும் வகையில் இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி