ஆப்நகரம்

"குடிமகனை" கொத்திய பாம்பிற்கு விஷம் ஏறி பாம்பு பலி... ராஜஸ்தானில் விநோதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபோதையில் இருந்தவரை கொத்திய பாம்பிற்கு விஷம் ஏறி அந்த பாம்பே பலியான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 6 Jan 2020, 10:38 am
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் மதுபோதையில் வெட்ட வெளியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கருநாக பாம்பு ஒன்று அவர் அருகில் நின்று படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.
Samayam Tamil Rajasthan Snake Video


பாம்பின் சத்தத்தைக் கேட்டு எழுந்த அந்த குடிகாரர் பாம்பை பார்த்துப் பயப்படாமல் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் பாம்பு அங்கிருந்து செல்லாததால் அந்த பாம்பைப் பிடித்து விளையாடத் துவங்கிவிட்டார்.

அந்த பாம்பு அவரை பலமுறை சீண்டியபோதும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் தொடர்ந்து அந்த பாம்புடனேயே விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் பாம்பை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

Also Read : இந்திய கப்பலை தாக்க வந்த நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந்திய கடற்படை... அடுத்து நடந்தது?

அப்பொழுது பாம்பு அவரை பல முறை கொத்தியது. ஆனால் அவர் அதற்கு எல்லாம் அசரவேயில்லை. இந்த சம்பவத்தை அவரை சுற்றி பலர் நின்று ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.


அவரது தோளிலிருந்த பாம்பு அவரை கொத்திக் கொத்தி டயர்டாகி கடைசியில் உயிரையே விட்டுவிட்டது. இதை அருகிலிருந்தவர்கள் பார்த்து பாம்பு கொத்தியதில் பாம்பிற்கு விஷமேறி பாம்பு பலியானதைப் பார்த்தனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி