ஆப்நகரம்

பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற நாய்... - வைரலாகும் புகைப்படம்

டில்லியில் ஒருவர் தன் நாய்க்கும் ஹெல்மெட் அணிவித்து பைக்கில் கூட்டிச்சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களல் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 21 Oct 2019, 4:00 pm
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் மாறி மாறி ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது சற்று நல்ல விதமாக தான் மாறியிருக்கிறது. இன்று சாலைகளில் ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களைப் பார்ப்பது மிக குறைவு தான். பலர் பாதுகாப்பு என்பதை புரிந்து ஹெல்மெட் அணிந்தாலும் சிலர் போலீசாரின் அபாராதத்திற்கு பயந்தாவது ஹெல்மெட் அணிகின்றனர்.
Samayam Tamil பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற நாய்


இந்நிலையில் இவ்வளவு நாள் விழிப்புணர்வு செய்தது நல்ல விஷயம் தான் என்பதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read : உலகத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... நம்புங்கள்...!

அந்த புகைப்படத்தில் ஸ்கூட்டரில் செல்லும் ஒருவர் தன் பின்னால் தன் வீட்டு செல்லப்பிராணியான நாயை ஏற்றிச் செல்கிறார். அந்த நாய்க்கும் ஹெல்மெட் அணிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அதில் உள்ள அவரது வாகனத்தின் நம்பர் பிளேட்டின் படி இது டில்லியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது.

இவர் பைக்கில் செல்லும்போது பாதுகாப்பிற்காக நாய்க்கு ஹெல்மெட் அணிவித்தாரா, அல்லது போலீசார் நாய்க்கு ஹெல்மெட் இல்லை என அபராதம் போட்டாலும் போடுவார்கள் என நினைத்து நாய்க்கு ஹெல்மெட் அணிவித்தாரா என்பது தெரியவில்லை.

Also Read : இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் "பாகிஸ்தான்" ; ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

ஆனால் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு பெரும் அளவில் ஏற்பட்டு வருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் இந்தியா மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களில் நாயை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இவ்வாறு வாகனத்தில் நாயை ஏற்றிச் செல்லும் போது அது அந்த நாயை ஏற்றிச் செல்பவருக்கு மட்டுமல்லாமல் அவருடன் சாலையில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு நிறைந்த பயணமாகும். தகுந்த பாதுகாப்பு இல்லாமல் செல்லப்பிராணிகளை பைக்கில் எடுத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

அடுத்த செய்தி