ஆப்நகரம்

தெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழந்த மனிதர்!

நாய்களுக்கு ஆதரவு அளித்து வந்த நபர், அநாதையாக தெருவில் மரணம், மனமுருகும் செய்தியுடன் பரவும் வைரல் புகைப்படம்.

Samayam Tamil 28 Oct 2020, 12:19 pm
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள். அதாவது, தீமை செய்பவனை, அவன் செய்யும் தீமையே கொல்லும் என்ற பொருள் கொண்ட பழமொழி இது. ஆனால், நல்லது செய்பவருக்கும், அதே போல மரணம் ஏற்படுவது பெரும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது.
Samayam Tamil தெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழந்த மனிதர்!


கடந்த ஒரு வார காலமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், பப்பு சுக்லா ஜி என கூறப்படும் ஒரு முதியவரின் இறந்த உடல் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்துடன் ஒரு செய்தியும் பரவு வருகிறது. அந்த குறிப்பில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் திரு. பப்பு சுக்லா ஜி, இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தெருவில் வசித்து வரும் நபர். இவர் கடந்த பல வருடங்களாக, தெருக்களில் திரியும் நாய்களுக்கு உதவி வந்தார்.

இவர் நேற்று (கடந்த ஒரு வார காலமாக, இதே செய்தியுடன் தான் இந்த பதிவு சமூக தளங்களில் உலாவி வருகிறது, ஆகவே, சரியான நாள் தெளிவுற தெரியவில்லை. அக்டோபர் 25ம் நாள் முதல் இந்த செய்தி, இப்புகைப்படத்துடன் பரவி வருவதாக அறியப்படுகிறது. இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை) இறந்துவிட்டார், இவர் வளர்த்து வந்த தெரு நாய்கள், இவரது இறந்த உடலை சுற்றி இருந்து உடலை பாதுகாத்து வருகின்றன. விரட்டினாலும், சுக்லா ஜியின் உடலை விட்டு நகர அவை மறுக்கின்றன., என்ற குறிப்புடன் இந்த புகைப்படம் பரவி வருகிறது.

பப்பு சுக்லா ஜி என குறிப்பிடப்படும் வைரல் நபரின் புகைப்படம்:


இந்நபர் நிஜமாகவே இறந்துவிட்டாரா? இவர் பெயர் பப்பு சுக்லா ஜி என்பது உண்மையா? இந்த புகைப்படம் எப்போதிருந்து இப்படியான தகவலுடன் நெட்டில் பரவி வருகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், பலபேர் இந்த புகைப்படத்தை, அதே தகவலை காபி, பேஸ்ட் செய்து கடந்த ஒரு வார காலமாக பரப்பி வருகிறார்கள்.

அடுத்த செய்தி