ஆப்நகரம்

WorldCup 2019: ரிஷப் பண்ட் தோளில் கை போட்டிருப்பது யாரு பேயா? வைரலாகும் புகைப்படம்

இந்தியா வங்கதேசம் இடையே போட்டி முடிந்த பின்பு இந்திய அணி வீரர்கள் வெளியில் சுற்றினர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 6 Jul 2019, 5:58 pm
உலககோப்பை போட்டிகள் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று இந்தியா இலங்கை இடையே போட்டி நடக்கிறது. இன்றைய போட்டி பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil ரிஷப் பண்ட் தோளில் கை போட்டிருப்பது யாரு பேயா


இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கடந்த இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்பு வீரர்கள் ஹார்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தோனி, பும்ரா, மயங்க் அகர்வால் ஆகியோர் சேர்ந்து வெளியில் சுற்றியுள்ளனர். அப்பொழுது ஹார்திக் போட்டியில் செல்பி போட்டோ ஒன்றை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த புகைப்படம் வைரலான சூழ்நிலையில் இந்த புகைப்படத்தில் வித்தியாசமான ஒரு விஷயம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் ரிஷப் பண்டின் இடது தோளில் ஒருவர் கை வைத்துள்ளார். அது யார் கை என்பது தெரியவில்லை. இது யாருடைய கை என்பது தற்போது டுவிட்டரில் பெரும் கேள்வியாக வலம் வருகிறது. ஒவ்வொருவரும் ஒரு ஒரு கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். சிலர் இது போட்டோஷாப் செய்யப்பட்டது. சிலர் இது பார்தீப் படேல் கை எனவும் கூறுகின்றனர். ஆனால் பார்த்தீப் படேல் இங்கிலாந்திலேயே இல்லை அவர் இந்தியாவில் தான் இருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலனோர் பேய்யின் கை என சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர். டுவிட்டரில் இந்த கை குறித்து வெளியாகும் டுவிட்களை கீழே காணுங்கள்.











அடுத்த செய்தி