ஆப்நகரம்

வீரமரணடைந்த ராணுவ வீரருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்; குழந்தைகளை வளர்த்து ராணுவத்திற்கு தான் அனுப்புவேன் என தாய் சபதம்...!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ராணுவ வீரர் 8 மாதங்களுக்கு முன்னர் பாக்., பயங்கரவாதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த இரண்டு குழந்தைகளையும் ராணுவத்திற்கு தான் அனுப்புவேன் என அவரது தாய் சபதம் செய்துள்ளார்.

Samayam Tamil 11 Jan 2019, 4:24 pm
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள குடியாலா கிராமத்தை சேர்ந்தவர் ஷகீத் கணபத்ராம். இவர் தனது 21வது வயதில் நாட்டிற்கு சேவை செய்யும் ஆர்வத்தில் ராணுவத்தில் இணைந்தார். இவரது சிறு வயது முதல் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக கொண்டவர்.
Samayam Tamil வீரமரணடைந்த ராணுவ வீரருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்
வீரமரணடைந்த ராணுவ வீரருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்


இவருக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தாங்தர் செக்டார் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். இந்த பகுதி இந்தியா - பாக் எல்லை பகுதியாகும். இங்கு ராணுவத்தினர் மீது அதிக அளவில் தாக்குதல் நடக்கும்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்ன பாக்., பயங்கரவாதிகள் தாங்தர் செக்டார் பகுதியில் தீடீர் என தாக்குதல் நடத்தினர். அதனால் இந்திய ராணுவத்தினரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஷகீத் பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் பலியாகும் போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

தற்போது அவரக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த குழந்தைகள் பிறந்து 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனை பெட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் வைத்து ஷகீத்தின் மனைவி தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு இருக்கும் படி எடுக்கப்பட்ட புகைப்படமும் இதனும் இந்த குழந்தைகள் வளர்ந்தும் அவர்களை ராணுவத்திற்கு அனுப்புவேன் என கூறுவது போன்ற வாசகமும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இது குறித்து ஷகீத்தின் மனைவி ரூபி கூறும் போது : "அவர் இறந்த பின்பு அவர் மீது மூவர்ணக்கொடியை போர்த்தி அவரது உடல் எங்கள் வீட்டிற்கு வந்த நாளை ஒரு நாளும் மறக்க முடியாது. அவர் இல்லாத இந்த 8 மாதங்கள் எவ்வாறு கழிந்தது என்று எங்களுக்கு தான் தெரியும். இந்த 8 மாதங்கள் எனக்கு 8 ஆண்டுகள் போல உள்ளது. இப்பொழுது எனக்கு ஒர பெண்ணும் ஒரு ஆணும் கடவுளின் வரமாக கிடைத்துள்ளது. இவர்களையும் வளர்த்து நான் நம் நாட்டை பாதுகாக்க ராணுவத்திற்கு அனுப்புவேன்." என கூறினர்.

கடந்த 2015ம் ஆண்டுதான் ஷகீத்திற்கும் ரூபிக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணமாகி 3 ஆண்டுகுள் கூட சரியாக வாழா நிலையில் ரூபி தனது கணவனை இழந்துள்ளார். இருந்தாலும் அவர் தனது குழந்தைகளையும் ராணுவத்திற்கு அனுப்ப உறுதி கொண்டுள்ளார்.

இந்த செய்திதற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வரகிறது. பலர் ரூபியின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி