ஆப்நகரம்

coronavirus க்கு பயந்து மனைவியை டாய்லெட்டில் அடைத்து வைத்த கணவன்

கொரோனா வைரஸிற்கு பயந்து மனைவியை கணவன் டாய்லெட்டில் அடைத்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2020, 12:33 pm
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த பயம் அதிகரித்து விட்டது. இந்தியாவில் டில்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பெங்களூருவிலும் ஒருவர் மீது கொரோனா தாக்குதல் இருக்குமோ என்ற சந்தேகம் வந்துள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவிற்காக சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகவும், கூறப்படுகிறது.
Samayam Tamil corona virus


இந்நிலையில் ஐரோப்பா மாநிலம் லிதுவானியா என்ற நாட்டில் உள்ள பெண் ஒருவர் இத்தாலியிலிருந்து வந்த சீனப்பெண் ஒருவரைச் சந்தித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் தன் கணவரிடம் அவரை சந்தித்தது குறித்துக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் டாக்டருக்கு போன் போட்டு ஆலோசனை கேட்டுள்ளார். அவர் அவரது மனைவியைத் தனிமைப்படுத்தச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டதும் அவர் தனது மனைவியை வீட்டின் டாய்லெட்டிற்குள் அனுப்பி டாய்லெட்டை அடைத்துவிட்டார். மனைவி எவ்வளவோ தட்டியும் திறக்கவில்லை.

Also Read : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா?

பின்னர் மனைவி போலீசிற்கு போன் செய்து அவர்கள் வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. அதன் பின் போலீசார் கணவரை எச்சரித்து அனுப்பினர்.

கொரோனாவிற்கு பயந்து மனைவியையே கணவர் டாய்லெட்டிற்குள் போட்டுப் பூட்டிய செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி