ஆப்நகரம்

"பிரிந்து வாழும் கணவர் மூலம் ஒரு குழந்தை வேணும்" : கோர்ட்டில் முறையிட்ட மனைவி

விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் கணவரிடம் இருந்து தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஒரு பெண் மனு செய்துள்ளார்.

Samayam Tamil 24 Jun 2019, 4:48 pm
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த கணவர் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு தன் மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
Samayam Tamil விவாகரத்தான கணவர் மூலம் ஒரு குழந்தை வேணும்


இந்நிலையில் மனைவி தற்போது கோர்ட்டை ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் அணுகியுள்ளார். தற்போது அவர் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் கணவரிடம் இருந்து தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என மனு செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையை, குழந்தையின் தாயே பராமரித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தனது கணவர் மூலம் மற்றொரு குழந்தை வேண்டும் என மனு செய்துள்ளார். தனது கணவருக்கும் தனக்கும் முறையாக விவாகரத்தாகாததால் இதை கேட்பதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோர்ட் இதற்கு முன்னர் இது போன்ற பிரச்சனையை சந்தித்ததே இல்லை. ஒரு பெண் தனது வாரிசை பெற்றுக்கொள்ள அனைத்து விதமான உரிமைகளும் உள்ளன. இதே நேரத்தில் அவரது கணவரை, மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கோர்ட் கட்டாயப்படுத்தவும் முடியாது. செயற்கை கருவுற்றல் முறையில் கருவுற செய்ய வேண்டும் என்றால் அதற்கும் கணவரின் சம்மதம் வேண்டும்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கோர்ட் இது தொடர்பாக கணவரும் மனைவியும் இணைந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி