ஆப்நகரம்

விவாகரத்தான கணவனுடனேயே மீண்டும் ஓடிப்போன மனைவி...! என்ன காரணம் தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆஸ்கட் மாதம் கணவனை விவாகரத்து செய்த மனைவி தற்போது மீண்டும் அதே கணவனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போயுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2019, 1:09 pm
குஜராத் மாநிலம் கம்பீர்புரா கிராமத்தைச் சேர்ந்த சுகாபாய் தத்வியின் மகள் மீனாட்சி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அணில் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்குப் பெற்றோர்கள் சம்மதிக்காததால் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.
Samayam Tamil விவாகரத்தான கணவனுடனேயே மீண்டும் ஓடிப்போன மனைவி


இவர்கள் திருமணம் செய்தது மீனாட்சியின் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இதற்கிடையில் இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியே அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

Also Read : சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவாகரத்தான இருவரும் மீண்டும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற மீனாட்சி வீட்டார் நேரடியாக அணில் வீட்டிற்கு வந்து அவரது வீட்டிலிருந்த அணிலின் தாயார் விச்சிபனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

Also Read : ஆட்டோவில் அமர்ந்து "மப்பு" ஏத்தும் பெண்... வைரல் வீடியோவில் இருப்பது யார் தெரியுமா?

இதையடுத்து குஜராத் போலீசார் மீனாட்சியின் வீட்டார் 4 பேரைக் கைது செய்துள்ளனர். முதலில் ஓடிப்போன மீனாட்சி அணில் ஜோடி ஏன் விவாகரத்து பெற்றனர். அவர்கள் ஏன் மீண்டும் ஓடிப்போனார்கள் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் விவாகரத்தான கணவனுடன் மனைவி மீண்டும் ஓடிப் போன ஒரு விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி