ஆப்நகரம்

வங்கி கணக்கில் ரூ 3.1 லட்சம் போட்ட மோடி? ம.பி பெண்ணிற்கு அடித்தது அதிஷ்டம்..!

மத்திய பிரதேச மாநிலம் கராரியா தக்ஷில் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் மம்தா கோலி, விவசாய குடும்பமான இவர்கள் தங்களின் அன்றாட பணத்தேவைகளை பூர்த்தி செய்யவே திணறி வந்தனர். இவர் வங்கியில் 0 பேலன்ஸ் வங்கி கணக்கை பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தின் துவங்கியிந்தனர்.

Samayam Tamil 13 Mar 2019, 5:56 pm
மத்திய பிரதேச மாநிலம் கராரியா தக்ஷில் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் மம்தா கோலி, விவசாய குடும்பமான இவர்கள் தங்களின் அன்றாட பணத்தேவைகளை பூர்த்தி செய்யவே திணறி வந்தனர். இவர் வங்கியில் 0 பேலன்ஸ் வங்கி கணக்கை பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தின் துவங்கியிந்தனர்.
Samayam Tamil வங்கி கணக்கில் ரூ 3.1 லட்சம் போட்ட மோடி


இந்நிலையில் ஒருநாள் இவரது வங்கி கணக்கில் ரூ 3.10 லட்சம் வந்திருந்தது. இதை பார்த்ததும் மம்தா சந்தோஷத்தில் முழ்கினார். தனது வங்கி கணக்கில் பிரதமர் மோடி தான் பணம் போட்டுள்ளார் என நம்பி அந்த பணத்தை எடுத்த மம்தா அதன் மூலம் தனக்கு இருந்த கடன்கள அடைத்தல் , தன் கணவருக்காக ஒரு பைக், மற்றும் தனக்கு தேவையான சில நகைகளை எல்லாம் வாங்கினார்.
Read More: இந்த தேர்தலில் ஓட்டு போட காத்திருக்கும் "பாகுபலி", "இட்லி" ,"ஆப்பிள்" : அதிர்ச்சியளிக்கும் தகவல்

இந்நிலையில் ஒரு நாங் அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் வந்து அவர்கள் வங்கியில் இருந்த பணம் தவறுதாலாக வந்து விட்டதாகவும் அந்த பணத்தை திரும்ப தரும்படியும் கேட்டு கொண்டனர். இதை கேட்டதும் மம்தா அதிர்ச்சியடைந்துவிட்டார்.

மம்தா தான் அந்த பணத்தை பெரும்பாலும் செலவு செய்து விட்டதாகவும், தன்னிடம் அந்த பணத்தில் மீதம் 85 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். தான் அந்த பணத்தில் பைக், நகை, கடன்களை அடைத்தல் உள்ளிட்ட செயல்களை செய்து விட்டதாக விளக்கம் அளித்தார்.
Read More: குடிபோதையில் ஆடிய மாப்பிள்ளை; காண்டான மணப்பெண், அடுத்து நடந்தது தான் ஹைலைட்..!

இதை கேட்டதும் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியாகிவிட்டனர். அதன் பின் அவரிடம் இருந்த ரூ 85 ஆயிரத்தை எடுத்து சென்றதோடு, மீதம் உள்ள பணத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றனர். ஆனால் மம்தாவின் வருமானம் அவ்வளவு தொகையை எளிதாக எடுக்கும் நிலையில் இல்லை. அவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாதநிலையில் உள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த அணில் என்ற ஒரு வியாபாரி தான் வைத்திருந்த டிராக்டரை விற்று விட்டு ரூ 3.5 லட்சத்தை தனது மகளின் திருமணத்திற்காக வங்கியில் டெப்பாசிட் செய்திருந்தார். இதில் ஏதோ ஒருவகையில் அவரது வங்கியில் இருந்த ரூ 3.1 லட்சம் பணம் மம்தாவின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது.
Read More: கர்ப்பிணி ஊழியரின் டிபன் பாக்ஸை திருடி தின்ற மேனேஜர்...!

அணில் இது குறித்து வங்கியில் புகார் அளித்த போது தான் இது குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. அதன் பின் தான் வங்கி அதிகாரிகள் போலீசுடன் மம்தாவின் வீட்டை அடைந்துள்ளனர். தற்போது இந்த பணத்திற்கு யார் பொறுப்பு, பணத்தை எடுத்து செலவு செய்த மம்தாவா? அல்லது பணத்தை தவறு இழைத்த வங்கியா? என சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி