ஆப்நகரம்

தன்னை கற்பழிக்க வந்த ஆணின் "அதை" அறுத்தெறிந்த பெண்

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க வந்த ஆணின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 10 Feb 2020, 11:04 am
இந்தியா போன்ற சில நாடுகளில் கற்பழிப்புகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. பெண்கள் இரவு நேரங்களில் வீட்டில் தனியாகச் செல்ல பயம் வரும் காலம் இன்னும் இந்தியாவில் இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் இந்த விஷயத்தில் மோசம் தான்.
Samayam Tamil women knife


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் 25 வயது மதிக்கத் தக்க பெண் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது வந்த 28 மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அந்த பெண்ணை கற்பழிப்பு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டில் கிட்சனிற்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அந்த ஆணின் ஆணுறுப்பை வெட்டிதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆண் அருகில் உள்ள ஃபைசலாபாத் மருத்துமவனைக்கு வந்து சிகிச்சை அளித்துள்ளார்.

Also Read : இந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்...

போலீசார் நடத்திய விசாரணையில் தான் தன்னை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை ஒரு பெண் கத்தியால் அறுத்துவிட்ட சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவத்தைப் பாகிஸ்தான் போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜாரன்வாலா புலால் சூலேரி என்பவர் உறுதி செய்தார்.

மேலும் அவர் கூறும்போது இந்த ஆணிற்கும் பெண்ணிற்கு நடுவே ஏற்கனவே பழக்கம் இருந்ததும். ஆனால் ஆணிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த ஆண் மற்றும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி