ஆப்நகரம்

போலீஸ் ஸ்டேஷனிற்குள் கெத்தாக எண்டரி கொடுத்த "எஸ்.ஐ" அக்கா இப்ப கம்பி எண்ணுகிறார் ஏன் தெரியுமா?

கடலூரில் போலி சப் இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு போலீஸ் ஸ்டேஷனிற்குள் சென்று போலீஸ் காரர்களை மிரட்டிய பெண்ணை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 2 Nov 2019, 1:09 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சக்கரபாணி என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் முருகேசன் அவரை போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றுள்ளார்.
Samayam Tamil Tamilnadu Police


இந்நிலையில் சக்கரபாணி இருந்த போலீஸ் ஸ்டேஷனிற்கு பெண் ஒருவர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சீருடையில் தலையில் கொண்டை, கையில் வாக்கி டாக்கியுடன் உள்ளே வந்து தன்னை கடலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

Also Read : பைக் ஓட்டுகிறேன் என்கிற பெயரில் ஒரு கொலை முயற்சி..! - குபீர் சிரிப்பை கிளப்பும் வைரல் வீடியோ

மேலும் சக்கரபாணி தனக்கு வேண்டியவர் எனவும் அவரை வெளியே விடவும் கேட்டுக்கொண்டார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போலீசாருக்கு இந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்தாக நினைவில்லை. தங்களுக்குக் கடலூர் மகளிர் போலீஸ் சப் இன்ஸ் பெக்டரை தெரியும் என்பதால் ஏதோ தவறு இருப்பதாக நினைத்து அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்த பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அருகிலிருந்த டிஎஸ்பி கேம்ப் ஆலுவகத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்த பெண்ணை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரிடம் டிஎஸ்பி கார்த்திகேயன் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலி போலீஸ் என்பது தெரியவந்தது.

Also Read : பழைய போன்களை விற்றே பணக்காரர்களாக போகும் கோவை இளைஞர்கள்...!

மேலும் அவர் சூர்யபிரியா என்பது அவரது கணவர் ராஜதுரை என்பது இவர்கள் போலீஸ் யூனிஃபார்மை போட்டுக்கொண்டு பலரை ஏமாற்றிவந்தது தெரியவந்தது. இதன் போலீசார் சூர்யபிரியா, ராஜதுரை மற்றும் சக்கரபாணியைக் கைது செய்துள்ளனர்.

Also Read : பல்வரிசை சரியில்லை எனக்கூறி மனைவிக்கு முத்தலாக்..!

சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனிற்கே சென்று போலீசை மிரட்டிய செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி