ஆப்நகரம்

ஆட்டோவில் அமர்ந்து "மப்பு" ஏத்தும் பெண்... வைரல் வீடியோவில் இருப்பது யார் தெரியுமா?

பொள்ளாச்சியில் ஆட்டோவில் அமர்ந்து ஒரு பெண் மது அருந்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Oct 2019, 10:50 am
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடல் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை வாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து கிடந்த ஆட்டோவில் ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அமர்ந்து மது குடித்தார். ஆட்டோவின் ஓட்டுநரும் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். இதைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.
Samayam Tamil ஆட்டோவில் அமர்ந்து மப்பு ஏத்தும் பெண்


இந்த வீடியோ வைரலாக பரவியது. இது குறித்து விசாரணை நடத்தப் பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் விடுத்த உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்ர் சின்னகாமனன் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் இந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த ஆட்டோ டிரைவர் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பதும், ஆட்டோவில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த பெண் ஐதிரபாத்தை சேர்ந்த கவுதமி என்பதும் தெரியவந்தது.

Also Read : 9 வயது சிறுமியை ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்யலாம்...! 1 மணி நேரம் முதல் 99 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் போடும் கொடூரம்

அவர் பொள்ளாச்சியில் பணியாற்றி வரும் தன் கணவரைப் பார்க்க வந்ததாகவும், கணவரைப் பார்த்த பின்பு மீண்டு ஐதராபாத்திற்கு கிளம்புதற்காக செல்வகுமாரின் ஆட்டோவில் ஏறியதும். ஆட்டோ டாஸ்மாக் கடை வழியாக சென்றபோது அந்த பெண் கடையைப் பார்த்ததும் அந்த பெண் ஆட்டோவை நிறுத்தி டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து ஆட்டோவிலேயே குடித்தது தெரியவந்தது.

Also See : உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லி கொடுத்தது?

இதையடுத்து போலீசார் செல்வக்குமார் மீது பொது இடத்தில் மது குடிக்க அனுமதித்தது. பொது இடத்தில் சிகரெட் பிடித்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தற்போது ஐதராபாத் சென்ற கவுதமியை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி