ஆப்நகரம்

முட்டை வாங்கி தராததால் கணவனை கழட்டிவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி

உ.பி மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் தினமும் முட்டை வாங்கி தரவில்லை எனக்கூறி கணவனைவிட்டு விட்டு காதலனுடன் மனைவி ஓடிப்போன சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 31 Oct 2019, 1:33 pm
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கு சென்றார் என தெரியாமல் அவரது கணவர் போலீசில் புகார் அளித்து தேடி வந்தார்.
Samayam Tamil women leaves husband because he wont get eggs to eat daily


போலீசார் அவரது மனைவியை கண்டு பிடித்த நிலையில் ஏன் கணவரை விட்டு ஓடி போனேன் என மனைவி சொன்ன காரணம் தான் அனைவரையும் வியக்க வைத்தது. மனைவிக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும் என்றும். தன் கணவர் தனக்கு தினமும் முட்டை வாங்கி தராததால் அவர் தனக்கு தினம் முட்டை வாங்கி தரும் ஒரு நபருடன் ஓடிவிட்டார் என தெரிவித்தார்.

Also Read: 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்...!

இது குறித்து கணவர் கூறும் போது தான் கூலி வேலைதான் பார்ப்பதாகவும், தனக்கு கிடைக்கும் சம்பளத்தால் தினமும் முட்டை வாங்கி சாப்பிட முடியாது எனவும் தனது இயலாமையை தெரிவித்தார். இதன் பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Watch : இப்படி ஒரு கேட்சை இன்டர்நேஷனல் மேட்சில் கூட பார்க்க முடியாது

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் அவரது மனைவியில்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் அவர் முன்னாள் ஓடிப்போனது கள்ளக்காதலனை தேடும்போது அவரும் கிடைக்கவில்லை. முந்தைய நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே முட்டைக்காக சண்டை நடந்துள்ளது. இதனால் இவர் மீண்டும் தனது கள்ளக்காதலுடன் முட்டைக்கு ஆசைப்பட்டு ஓடி போய்விட்டார் என மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் தன் மனைவியின் கள்ளக்காதலன் தன் மனைவிக்கு முட்டை வாங்கி கொடுத்தே அவரை ஏமாற்றி கூட்டி ஓடிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி