நாம் பல நேரங்களில் கிராமங்களில் ரோடு இல்லை, தண்ணீர் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என அதிகம் கவலைப்பட்டிருப்போம். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். என பல நேரங்களில் செய்திகளில் படித்து கடந்திருப்போம் ஆனால் கர்நாடக மாநிலம் எச் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இதற்கு வித்தியாசமான முறையில் தீர்வு ஒன்றை கண்டுள்ளார். இவர் சமீபத்தில் அம்மாநில முதல்வர் பசவராஜா பொம்மைக்கு ஒரு இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் "எனது கிராமத்தில் 5ம் வகுப்பு வரை தான் இருகு்கிறது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் 14 கி.மீ செல்ல வேண்டும். நான் தான் என் கிராமத்தில் முதுகலை வரை படித்திருக்கிறேன். நானும் விடுதியில் தங்கி தான் படித்தேன். என் கிராமத்திற்கு வர சரியான ரோடு வசதி கூட கிடையாது. அதனால் முதல்வர் இதை தனியாக கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். இது சரியாகும் வரை நான் திருமணம் செய்யப்போவதில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மெயிலை பார்த்ததும் மிரண்டு போன அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் அந்த ஊருக்கு செல்லவே நடந்து தான் செல்லவேண்டியது இருந்தது. இந்த செய்தி வெளியானதும் முதல்வர் அலுவலகத்திலிருந்து அந்த ஊருக்கு முதலில் ரோடு போடும் உத்தரவை வழங்கியது. மேலும் படிப்படியாக அந்த கிராமத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால் இந்த கிராமம் மட்டுமல்ல இந்தியாவில் பல கிராமங்கள் இது போல இருக்கிறது. ஒவ்வொருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் இன்னும் அந்த மக்கள் எவ்வளவு போராட்டங்களை செய்ய வேண்டும் என தெரியவில்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
இந்த மெயிலை பார்த்ததும் மிரண்டு போன அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் அந்த ஊருக்கு செல்லவே நடந்து தான் செல்லவேண்டியது இருந்தது. இந்த செய்தி வெளியானதும் முதல்வர் அலுவலகத்திலிருந்து அந்த ஊருக்கு முதலில் ரோடு போடும் உத்தரவை வழங்கியது. மேலும் படிப்படியாக அந்த கிராமத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால் இந்த கிராமம் மட்டுமல்ல இந்தியாவில் பல கிராமங்கள் இது போல இருக்கிறது. ஒவ்வொருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் இன்னும் அந்த மக்கள் எவ்வளவு போராட்டங்களை செய்ய வேண்டும் என தெரியவில்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்