ஆப்நகரம்

புலியை கயிறால் பிடித்த வீரன்... வைரலாகும் வீடியோ

மெக்சிகோ நாட்டில் ஒரு புலி தப்பித்து சாலையில் திரிந்து கொண்டிருந்தது அதை ஒருவர் வெறும் கையால் பிடிக்கும் வீடியோ சமூக தலைவர்களை வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 May 2020, 3:42 pm
பாம்பை கண்டால் படையே நடுங்கும் இது நம் எல்லோருக்கும் தெரியும் சிரிப்பை மட்டும் கண்டால் மட்டும் தான் படை நடக்குமா என்றால் இல்லை புலி சிங்கம் போன்ற எந்த வன விலங்கையும் கண்டாலும் படை நடுங்கும்.
Samayam Tamil Tiger Viral rope


மெக்சிக்கோவில் சாலையில் தப்பித்து ஓடும் புளியை மூன்று நபர்கள் துரத்தி செல்கின்றனர் ஒருவர் உதவியுடன் கையிலிருக்கும் சுருக்கு போட்டு கையுடன் புலியை நோக்கி ஓடுகிறார் இன்னொருவர் இரும்பு நாற்காலியில் உதவிகொண்டு புலிக்கு வழி விடாமல் தடுக்கிறார் இன்னொரு நபர் காரில் வந்த புலியை மடக்கி பிடிக்க உதவுகிறார். இவ்வாறாக கையில் கிடைத்த பொருட்களை வைத்து அந்தப் புலியை பிடிக்க மூன்று பெரும் முயற்சி செய்கின்றனர் அதன் பின்பு என்ன ஆனது என்பது தெரியவில்லை வெறும் 20 நொடிகளில் இந்த வீடியோ கட்டாகி விட்டது.

இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி இந்த சம்பவம் மெக்சிகோவில் நடந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததாக கூறப்படுகிறது பலரும் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர் இது குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் கமெண்டில் சொல்லுங்கள்

அடுத்த செய்தி