ஆப்நகரம்

"என்னை இன்று இரண்டு ஆண்கள் கற்பழித்துவிட்டனர்" : சிறுவன் போட்ட வைரல் ட்வீட்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தன்னை இரண்டு ஆண்கள் கற்பழித்துவிட்டதாக பதிவிட்ட ட்வீட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 26 Sep 2019, 12:19 pm

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தான் இன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil என்னை இன்று இரண்டு ஆண்கள் கற்பழித்துவிட்டனர்


அந்த சிறுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: "ஒரு மதிய வேளையில் நான் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பொது கழிப்பறை பகுதிக்கு சென்றேன். அங்கிருந்த இரண்டு ஆண்கள் என்னை நெருங்கி வந்து என்னிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்து கொண்டார்.


Also Read : மஞ்சள் மலைபாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி - வைரலாகும் வீடியோ

இதைக் கழிவறையிலிருந்த மற்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். யாரும் தட்டி கேட்கவில்லை. நான் கதறி அழுதேன். அதன் பின் அவர்கள் என்னை அங்கேயே விட்டு விட்டுத் தப்பியோடி விட்டனர். எனக்கு வேறு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. பின்பு வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

எனக்கு நடந்த இந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் அதை மறக்கவே முடியவில்லை. எனக்கு வெறும் 17 வயது தான் ஆகிறது, நான் எனது கன்னித்தன்மையை இழந்துவிட்டதாக எண்ணுகிறேன். எனக்கு ரேப் பா அல்லது இதை எப்படிக் குறிப்பிட வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால் இது தவறு என்று மட்டும் உணர முடிகிறது.

Also Read : ஸ்டைல் காட்டி உயிரை விட பார்த்த இளைஞர்...! ரயில்வே போலீசாரால் உயிர்தப்பினார் - வைரலாகும் வீடியோ

இதை யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை அதனால் தான் ட்விட்டரில் எழுதுகிறேன். எனது பெற்றோரிடம் சொல்லி படிப்பறிவு இல்லாத அவர்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்க விருப்பமில்லை. இது குறித்து போலீசிற்குப் போகவும் எனக்கு விருப்பமில்லை.


Also Read : சொந்த கல்யாணத்திற்கு 1 மணி நேரம் லேட்டாக சென்ற மாப்பிள்ளை

ஆனால் இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது. ஒரு பையனாக இருப்பதால் பாதுகாப்பானதாக இருப்பேன் என நினைத்திருந்தேன் அது முற்றிலும் தவறு. தற்போது எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக இருக்கிறது.

இதை நான் சொல்லும்போது எத்தனை பேர் நம்புவார்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இதை நான் ட்விட்டரில் எழுதக் காரணம் இதை எப்படி தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளத்தான். " எனக் குறிப்பிட்டிருந்தான்.

எனது கிட்னியை விற்று இந்த ஹெட்செட்டை வாங்கினேன்..! - வைரலாகும் அமேசான் ரிவியூ

சிறுவன் ஒருவன் இப்படியாகப் போட்ட பதிவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலர் இந்த சிறுவனுக்கு அறிவுரைகளைச் சொல்லி வருகின்றனர்.

அடுத்த செய்தி