ஆப்நகரம்

மலைக்கவைக்கும் சீதனம்! இந்த சீதனத்த வைக்கவே தனி வீடு கட்டணும் போலயே!

மலைக்கும் வைக்கும் அளவில் சீர்வரிசை அடுக்கி வைத்த பெண்வீட்டாரின் புகைப்படம், ட்விட்டரில் வைரல்.

Samayam Tamil 6 Nov 2020, 5:30 pm
பொதுவாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்வீட்டார் திருமணத்தின் போது, மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் அல்லது சீர்வரிசை அளிப்பது வழக்கும். சிலர் தங்கள் தகுதியை வெளிப்படுத்த செய்தாலும், ஏழை எளியோர்கள் மற்றும் பொதுப் பார்வையில், இத்தகைய வரதட்சணை என்பது சட்டப்படி குற்றமாகும்.
Samayam Tamil மலைக்கவைக்கும் சீதனம்! இந்த சீதனத்த வைக்கவே தனி வீடு கட்டணும் போலயே!


ஆனாலும், பெண்வீட்டார் தனது மகள் புகுந்த வீட்டில் மரியாதையுடன் வாழ, தங்களால் முடிந்ததை செய்கிறோம் என ஆங்காங்கே, இந்த சீர்வரிசை, சீதன முறைகளை பின்பற்றுகின்றனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த சீர்வரிசை பெருமளவில் காணப்படுகிறது. முக்கியமாக, சீர்வரிசையை தங்கள் கௌரவமாக பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சில ஊர்களில் திருமண மண்டபத்தில் சீர்வரிசையை அலங்கார பொருள் போல அடுக்கி வைத்திருப்பார்கள்.

சோப்பு, சீப்பு முதல் கட்டில், மெத்தை, அண்டா, குண்டா, பைக், கார் என மாப்பிள்ளை வீட்டாருக்கு வாங்கி வைத்த பொருட்களில் குண்டூசி கூட மறக்காமல், அடுக்கி வைத்து தங்கள் ஆடம்பரத்தை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி தான் இன்று ட்விட்டரில், சப்பாணி என்பவரது அக்கவுண்டில் பதிவிடப்பட்ட புகைப்படம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், மதுரையில் நடந்த திருமணத்தில் பெண்வீட்டார் கொடுத்த சீர்வரிசை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல் சீர்வரிசை போட்டோ:

அந்த சீர்வரிசை புகைப்படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் வாய்பிளந்து போகிறார்கள். ஏனென்னில், ஏறத்தாழ பத்து வீட்டு திருமணம் செய்யுமளவிற்கு ஏகபோக சீதனமாக அது காட்சியளிக்கிறது. நீங்களே பாருங்களேன்.

அடுத்த செய்தி