ஆப்நகரம்

8 மாதம் கொரோனா வார்டில் வேலை பார்த்த நர்ஸின் கதியை பாருங்க!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவரின் கொரோனாவிற்கு முன், பின் என்ற புகைப்படம் வைரலாக நெட்டில் பரவி வருகிறது.

Samayam Tamil 25 Nov 2020, 2:59 pm
ஏறத்தாழ 10 மாதங்களை கடந்துவிட்டோம், கொரோனாவுடனான போராட்டத்தில். ஃபிரண்ட் லைன் வாரியர்ஸ், ஹீரோஸ் என்று புகழப்படும் போலீஸ், மருத்துவர்கள், வங்கி மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்கள் இந்த காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்காக நிறையவே தியாகம் செய்துள்ளனர்.
Samayam Tamil before and after pic of tennessee nurse kathryn goes viral on twitter
8 மாதம் கொரோனா வார்டில் வேலை பார்த்த நர்ஸின் கதியை பாருங்க!


இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள். கொரோனாவின் கொடிய தாக்கம் அறிந்தும், கொரோனா நோயாளிகளின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மருத்துவர்கள். பல மருத்துவர்கள், மருத்துவம் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

பல சமயங்களில் கொரோனாவில் இருந்து குணமாகி வந்த நோயாளிகள் குறித்து மட்டுமே பேசும் நாம், அவர்களுக்கு மருத்துவம் அளித்து வரும் மருத்துவர்களின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பேசவோ, சிந்துக்கவோ மறந்துவிடுகிறோம்.

இரவு பகல் பாராமல், பணி நேரம் கவனிக்காமல் நோயாளிகளின் ஆரோக்கியம் மட்டுமே கருத்தில் கொண்டு சேவை செய்து வந்தனர் மருத்துவர்கள். அப்படியான லட்சக்கணக்கான மருத்துவ பணியாளர்களில் ஒருவர் தான் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கேத்ரின்.


இவர் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர் கொரோனா வார்டில் வைரஸ் தோற்று பதித்திருந்த மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, ஏறத்தாழ கடந்த 8 மாதங்களாக கேத்ரின் கோவிட் 19 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துளளர். டென்னசி மாகாணத்தில் மட்டும் ஏறத்தாழ 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து வந்த பல மருத்துவ பணியாளர்களுள் ஒருவர் தான் கேத்ரின். கேத்ரின் பகிர்ந்திருந்த வைரல் புகைப்படத்தில், ஒருபுறம் 27 வயது நிரம்பிய மிக இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் தோற்றமளிக்கும் நர்ஸாக காட்சியளிக்கிறார் கேத்ரின். அடுத்த புகைப்படத்தில் PPE கிட் உடையில் பல மணிநேரம் மாஸ்க் அணிந்து மிகுந்த சோர்வுடன் தோற்றமளிக்கிறார் கேத்ரின்.

இந்த before, after புகைப்படத்தை ட்விட்டரில் ட்ரெண்டான How it started, How its going என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார் கேத்ரின். இந்த பதிவு நவம்பர் 23,2020 அன்று மதியம் பதிவாகி இருந்தது. இன்று (25,நவம்பர் 2020) வரையிலும் இந்த ட்வீட் ஏறத்தாழ 1 மில்லியன் லைக் மற்றும் 88 ரீ-ட்வீட் உடன் நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு நாளுக்கு 12.5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார் கேத்ரின். கடந்த சனிக்கிழமை (21 நவம்பர், 2020) அன்று வேலை முடிந்து PPE கிட் கழற்றும் போது, சட்டென நான் பட்டம் பெற்ற போது என் முகம் எப்படி இருந்தது என்ற எண்ணம் மனதில் தோன்றியது அதனால் தான், இந்த புகைப்படங்களை பதிவிட்டேன் என கேத்ரின் கூறி இருந்தார். மேலும், நர்ஸாக முழு மனதுடன், விருப்பத்துடன் வேலை பார்த்து வருகிறேன் என்றும் கேத்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி