சமீப காலமாக இந்தியாவில் பெட்ரோலின் விலை மிகவும் அதிகமாகி வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் சாமான்ய மக்களின் வாழ்வில் பெட்ரோல் வாகனங்கள் ஓட்டுவதே கடினமான காரியமாக மாறிவிட்டது. இந்நிலையில் இதை கூறும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “விலை வாசியில் பெட்ரோல் ஒரு இன்னிங்ஸை பெற்றுவிட்டது. இந்த நூற்றாண்டில் இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. பெட்ரோல் தனது முதல் பந்துலேயே நம்மை வீழ்த்திவிட்டது. அதற்கு சமமாக டீசலும் இப்போது வந்துக்கொண்டுள்ளது. ஆட்டத்தில் இரண்டும் சரியான பார்ட்னர்ஷிப்பில் உள்ளன. பொது ஜனத்துக்கு எதிராக இப்படி ஒரு விளையாட்டை விளையாடுவது சாதரண விஷயமல்ல. ஆனால் நீங்கள் இருவரும் அதை செய்துள்ளீர்கள்” என கிரிக்கெட்டோடு பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வை ஒப்பிட்டுமனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.
மேலும் #PetrolDieselPriceHike என்ற ஹேஸ்டேக்கை இவர் ட்ரெண்ட் செய்துள்ளார். இதுவரை 5000 த்திற்கும் மேற்பட்ட ரீ டுவிட்களை கடந்துள்ளது. 18000 த்துக்கும் அதிகமானவர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர்.
இதற்கு ஒருவர் “உங்களை ஆண்டி இந்தியன் குழுவிற்கு அன்போடு வரவேற்கிறோம்” என கூறியுள்ளார்.
"நாம் நமது பிரதமருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போதும் விலை வாசி உயர்விற்கு ஆட்சி செய்ப்வர்கள் மட்டும் காரணமாக இருப்பதில்லை" என ஒரு டிவிட்டர் பயணர் கூறியுள்ளார்
அதில் “விலை வாசியில் பெட்ரோல் ஒரு இன்னிங்ஸை பெற்றுவிட்டது. இந்த நூற்றாண்டில் இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. பெட்ரோல் தனது முதல் பந்துலேயே நம்மை வீழ்த்திவிட்டது. அதற்கு சமமாக டீசலும் இப்போது வந்துக்கொண்டுள்ளது. ஆட்டத்தில் இரண்டும் சரியான பார்ட்னர்ஷிப்பில் உள்ளன. பொது ஜனத்துக்கு எதிராக இப்படி ஒரு விளையாட்டை விளையாடுவது சாதரண விஷயமல்ல. ஆனால் நீங்கள் இருவரும் அதை செய்துள்ளீர்கள்” என கிரிக்கெட்டோடு பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வை ஒப்பிட்டுமனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.
மேலும் #PetrolDieselPriceHike என்ற ஹேஸ்டேக்கை இவர் ட்ரெண்ட் செய்துள்ளார். இதுவரை 5000 த்திற்கும் மேற்பட்ட ரீ டுவிட்களை கடந்துள்ளது. 18000 த்துக்கும் அதிகமானவர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர்.
இதற்கு ஒருவர் “உங்களை ஆண்டி இந்தியன் குழுவிற்கு அன்போடு வரவேற்கிறோம்” என கூறியுள்ளார்.
"நாம் நமது பிரதமருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போதும் விலை வாசி உயர்விற்கு ஆட்சி செய்ப்வர்கள் மட்டும் காரணமாக இருப்பதில்லை" என ஒரு டிவிட்டர் பயணர் கூறியுள்ளார்