ஆப்நகரம்

OLA CABS: குடிக்க சென்றவருக்கு இந்த கேப் டிரைவர் செய்த உதவி என்ன தெரியுமா?

இன்று நம்மை சுற்றி ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்ட இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல், திருட்டு, கொலை, கற்பழிப்பு என ஏதேதோ விஷயங்கள் நடக்கிறது. இதை கேள்விபடும் நாம் இதை செய்தவர்களை கொலை செய்ய வேண்டும் தூக்கில் போட வேண்டும்.

Samayam Tamil 13 Jun 2019, 4:46 pm
இன்று நம்மை சுற்றி ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்ட இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல், திருட்டு, கொலை, கற்பழிப்பு என ஏதேதோ விஷயங்கள் நடக்கிறது. இதை கேள்விபடும் நாம் இதை செய்தவர்களை கொலை செய்ய வேண்டும் தூக்கில் போட வேண்டும். அவர்களை விசாரிக்கவே கூடாது உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று எல்லாம் கோபத்தில் பேசுகிறோம்.
Samayam Tamil குடிக்க சென்றவருக்கு இந்த கேப் டிரைவர் செய்த உதவி என்ன தெரியுமா


சமீபத்தில் ஒருவர் செய்த டுவிட் அது எல்லாம் இல்லை. இந்த உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. மும்பையை சேர்ந்த பாபா செயிரா என்பவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பப்பிற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தனது வாலெட்டை அங்கேயே அதிலேயே விட்டு விட்டார்.

அதை ஓட்டி சென்ற கேப் டிரைவர் அதை பத்திரமாக அவரிடமே கொடுத்துள்ளார். இதை அவர் விவரித்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதை கீழே காணுங்கள்








இது போன்ற சம்பவங்கள் தான் மனிதர்கள் மீது நமக்கு ஏற்படும் அவ நம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த டுவிட்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த கேப் டிரைவர் போல நாமும் பல விஷயங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.

அடுத்த செய்தி