ஆப்நகரம்

Pakistan Media Reaction: "எங்களுக்கு வலிக்கலியே...!" பாக்., பத்திரிக்கையாளர்களின் சமாளிப்பு டுவீட்கள்

இந்தியாவின் விமானப்படை போர் விமானங்கள் இன்று அதிகாலை எல்ஓசி எனப்படும் லைன் ஆஃப் கண்ட்ரோலை கடந்து பாக் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இந்த சம்பவம் பாக்.,கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு பத்திரிக்கையாளர்களின் டுவீட்களை கீழே காணுங்கள்

Samayam Tamil 26 Feb 2019, 1:04 pm
இந்தியாவின் விமானப்படை போர் விமானங்கள் இன்று அதிகாலை எல்ஓசி எனப்படும் லைன் ஆஃப் கண்ட்ரோலை கடந்து பாக் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இந்த சம்பவம் பாக்.,கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil எங்களுக்கு வலிக்கலியே...! பாக்., பத்திரிக்கையாளர்களின் சமாளிப்பு டுவீட்கள்


இந்த தாக்குதலில் 200-300 பயங்கரவாதிகள் வரை பலியாகியிருக்ககூடும் எனவும் இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

இந்தியா விமானங்கள் முசாஃபர்பாத் பகுதியில் வந்து தாக்குதல் நடத்தியதை பாக்., அரசு ஒப்பு கொண்டது.
Watch: ஜெய்ஷ்-இ-முகமது முகாமை அழித்த இந்திய விமானப் படை
தற்போது இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய பத்திரிக்கையளர்கள் டுவீட் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் முக்கிய பத்திரிக்கையாளர் சல்மான் மசூது இந்திய விமானம் தாக்குதலே நடத்தவில்லை என டுவீட் செய்துள்ளார்.

முகமது தாகி என்பவர் இந்த விமானப்படை வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதை நாம் ஒப்பு கொண்டுள்ளோம். 12 விமானங்களில் அவர்கள் வந்துள்ளனர் அவர்களில் ஒரு விமானத்தை கூடவா நம்மால் தாக்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More: பாக்., பயங்கரவாதிகளை அழித்த மிராஜ்2000 விமானம் பற்றிய முழு தகவல்கள்..!
இது போல பலர் செய்த டுவீட்களை நீங்கள் கீழே காணலாம்.
Read more: பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது விமானப் படை தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி

அடுத்த செய்தி