ஆப்நகரம்

சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடும் பஜனை பாடல் வீடியோ - ட்விட்டர் வைரல்!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடிய பஜனை பாடல் வீடியோ.

Samayam Tamil 8 Sep 2020, 1:24 pm
கடந்த ஜூன் 14,2020 அன்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி இந்திய திரை பிரபலங்கள் மற்றும் அவரது உலகளாவிய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
Samayam Tamil சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடும் பஜனை பாடல் வீடியோ - ட்விட்டர் வைரல்!


அவரது மரணத்தில் குழப்பங்கள், சூழ்ச்சிகள் மறைந்துள்ளன என்று ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் வட்டார புள்ளிகளும் சந்தேகம் எழுப்பினர். இது சமூக தளங்களில் வைரலாக பரவின, பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு துவங்கப்பட்டது.

மும்பை போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டு, வழக்கும் சிபிஐ கையில் ஒப்படைக்கப்பட்டது. ஒருபுறம் நாளுக்கு நாள் புது, புது தகவல்கள் வெளியாகி வந்தவண்ணமாக உள்ளது. மறுபுறம், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு விசாரணையில் இது கொலை அல்ல. அதற்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் எதுவும் கிடைக்வில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

சுஷாந்த் சிங் ராஜப்புத் மறைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆனாலும், அவர் சார்ந்த செய்திகள் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டே தான் இருக்கிறது. கங்கானாவின் புகார்களில் இருந்து, காதலி ரியா விசாரணை வரை... மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அவர் குறித்த பழைய நினைவுகளை அனுதினமும் பகிர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

அவ்வகையில், சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவில், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு பஜனை பாடல் பாடும் வீடியோ ரசிகர்கள் இடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பாடலை சுஷாந்த் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடிய போது எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலை சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது சகோதரிகளுடன் சேர்ந்து பாடியாதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி