ஆப்நகரம்

முதன்முறையாக எங்களை அழ வைத்து விட்டாரே கிரேஸி மோகன்...! பிரபலங்கள் டுவிட்

தமிழ் சினிமா, நாடக உலகம் என தனக்கான பாணியில் படைப்புகளை உருவாக்கி மக்கள் மனதில் நீக்காத இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். இவரது எழுத்துக்களில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு இருக்கும்.

Samayam Tamil 10 Jun 2019, 5:21 pm
தமிழ் சினிமா, நாடக உலகம் என தனக்கான பாணியில் படைப்புகளை உருவாக்கி மக்கள் மனதில் நீக்காத இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். இவரது எழுத்துக்களில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு இருக்கும். சினிமா உலகில் எந்த விதமான டிரெண்ட் இருந்தாலும் கிரேஸி மோகன் நகைச்சுவையில் ஒரு படைப்பு வந்துவிட்டால் அது ஹிட் தான்.
Samayam Tamil முதன்முறையாக எங்களை அழ வைத்து விட்டாரே கிரேஸி மோகன்


அவர் கமல்ஹாசனுடன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. இதுபோல் அவரது பல படைப்புகள் இன்று வரை ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுபவை. அப்படிப்பட்ட கலைஞன் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் அவரது உடலை விட்டு பிரிந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் பலர் கிரேஸி மோகனிற்கு டுவிட்டர்களின் அவரை நினைவுக்கூறும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

















அடுத்த செய்தி